fbpx

இளைஞர்களே இனி வேலைக்கு செல்ல வேண்டாம்..!! வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்..!! மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு..!!

தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தேனி மாவட்டத்தில், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் புதிய தொழில்களை உருவாக்குவதன் மூலம் சுயவேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழக அரசால் ‘வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ அறிவிக்கப்பட்டு, மாவட்டத் தொழில் மையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பின் உச்ச வரம்பு ரூ.15 லட்சமாகவும், அதற்கான மானியம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2023-24ஆம் நிதியாண்டில் கடன் திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியானது இணையதளம் மூலம் வழங்கப்படுகிறது.

அதில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் https://www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தினர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தினரும் இதில் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்களுக்கு கடன் தந்து அவர்களை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Chella

Next Post

நீங்கள் முதல் பட்டதாரியா அப்படி என்றால் இனிய கவலை வேண்டாம்…..! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!

Sat Jul 1 , 2023
தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் வைத்து அவர்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் காரணமாக, மாணவர்கள் மிகுந்த பயனடைந்து வருகிறார்கள்இந்த நிலையில் தான் தமிழக அரசு பணியிடங்களில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில், ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. நோய் தொற்று காரணமாக, பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்கும் அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் விதத்தில், […]

You May Like