கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் விடுபட்ட பெண்களும் மகளிர் உரிமைத் தொகை […]

நகரங்களுக்கு இடையே பயணிக்கும் போது நேரத்தை மட்டுமல்ல, எரிபொருள் மற்றும் பணத்தையும் மிச்சப்படுத்த நாடு முழுவதும் விரைவுச் சாலைகளின் வலையமைப்பு கட்டமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், விரைவுச் சாலை பயனர்களைத் தொந்தரவு செய்யும் ஒரு விஷயம் சுங்க வரி. இந்த சாலைகள் பொதுவாக அதே தூரத்திற்கு நெடுஞ்சாலை சுங்கக் கட்டணங்களை விட 25 சதவீதம் அதிகமாக வசூலிக்கின்றன. இருப்பினும், விதிகளில் மாற்றத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 15 முதல், விரைவுச் சாலைகள் […]

தமிழக தேர்தல் வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் பார்த்தால், 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக திகழ்கிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்டு ‘சென்னை மாகாணம்’ சந்தித்த முதல் தேர்தல் இது என்பதுதான் இதன் வரலாற்றுச் சிறப்பு. ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவுடன் இருந்த பகுதிகள் பிரிந்து சென்றதால், சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 375-லிருந்து 205-ஆக குறைந்து, […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் மர்மமான முறையில் மாயமானார். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட தீவிர செல்போன் அழைப்பு விசாரணையில், அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் மாமாவே (அத்தையின் கணவர்) அவரைக் கடத்திச் சென்றது அம்பலமானது. மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தை அறிந்த மாநில மகளிர் ஆணைய துணைத் […]

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் சீகன்பூர் கிராமத்தை சேர்ந்த ரீனா என்ற பெண், தனது வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவர் படுத்திருந்த இடத்தில் துணிமணிகள் மற்றும் நகைகள் அப்படியே இருக்க, 5 அடி நீளமுள்ள பாம்பின் சட்டை மட்டும் கிடந்ததைக் கண்டு குடும்பத்தினரும் கிராம மக்களும் அதிர்ச்சியடைந்தனர். சினிமா பட பாணியில், ரீனா ‘இச்சாதாரி நாகினியாக’ (மனித உருவம் எடுக்கும் பாம்பு) மாறி மறைந்துவிட்டதாக கிராம மக்கள் மத்தியில் […]

மத்தியப் பிரதேச மாநிலம் தேவ்ரி நகரில் கடந்த 6 மாதங்களாக மர்மமாக நீடித்த இளைஞனின் மரண வழக்கு, தற்போது ஒரு கழிவுநீர் தொட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞரான பிரின்ஸ் பால்மிகி, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அவரது நண்பர் சோயிப் என்பவரால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. […]

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியானது ‘விஜய ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டில், இந்த முக்கியமான விரத நாள் பிப்ரவரி 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. ஆன்மீக ரீதியாக இந்த நாளுக்கு மிகப்பெரிய மகத்துவம் உண்டு. இந்த நாளில் முழு மனதுடன் மகா விஷ்ணுவை வழிபட்டு, அவருக்குப் பிடித்தமான மஞ்சள் நிறப் பொருட்களை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினால், நம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியும் […]

தமிழக அரசியல் களத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து நிலவும் மர்மம், தற்போது அவரது சொந்த அணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளில் ஓபிஎஸ் காட்டி வரும் தொடர் மவுனம், அவருடன் பயணிக்கும் முக்கிய நிர்வாகிகளை ஒருவித தவிப்பிற்கும், அதிருப்திக்கும் தள்ளியுள்ளது. இதனால், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என கருதும் நிர்வாகிகள், மாற்றுப் பாதையை தேட தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஓபிஎஸ் அணியின் முக்கிய […]

வாயில் அடிக்கடி தோன்றி இன்னல்களை தரும் ‘ஆப்தஸ் ஸ்டோமாடிட்டிஸ்’ (Aphthous Stomatitis) எனப்படும் வாய்ப்புண் அழற்சி, இன்று பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்திய மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த வாய்ப்புண்ணால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இத்தகைய புண்கள் ஓரிரு வாரங்களில் தானாகவே மறைந்துவிடும் என்றாலும், இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் ஆறாத புண்கள் ஏதோ ஒரு […]