வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்களை செப்டம்பர் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ‘வைக்கம் விருது’ சமூகநீதி நாளான செப்.17-ம் தேதி அரசால் வழங்கப்படும்’’ என்று […]

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை ‘ஜெய்சங்கர் சாலை’ என்று மாற்றம் செய்ய அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]

இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி யுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுவடையக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]

சுபமுகூர்த்த தினமான 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் […]

கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்தவர் 24 வயதான மணிகண்டன். இவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர், தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், வேலைக்காக மாயனூருக்கு சென்ற போது அங்கு வசிக்கும் 23 வயது இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி மணிகண்டன், தனது கள்ளக்காதலியுடன் வீட்டை விட்டு, வெளியேறியதால் மணிகண்டனின் தந்தை லாலாபேட்டை […]

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததாதால் பரபரப்பு நிலவியது.. கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜ கண்டிகையில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று பள்ளியில் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.. இந்த நிலையில் இன்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, திடீரென மாணவிகளிடையே மூச்சுத்திணறல், இருமல் போன்ற பிரச்சனைகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தொடர்ந்து 10-ம் வகுப்பு படிக்கும் 4 […]

தவெக மாநாட்டில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார், விஜய் பவுன்சர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்.. இவர் கடந்த 21-ம் தேதி மதுரையில் நடந்த தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்றார்.. இந்த மாநாட்டில் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், விஜய் ரேம்ப் வாக் செய்த போது அந்த மேடையில் எகிறி குதித்து உள்ளே செல்ல முயன்றார்.. ஆனால் விஜய் உடன் […]

அமித்ஷா ஆலோசனைப்படி, பாஜக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கொடுத்துள்ளது. நெல்லையில் நேற்று பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.. மத்திய உள்துறை அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் 2026 தேர்தல் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறினார். மேலும் ராகுல்காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது எனவும், உதயநிதி ஸ்டாலின் எப்போது முதல்வராக […]