தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு இருந்த செல்வாக்கு தற்போது மெல்ல மெல்ல சரிந்து வருவதன் அடையாளமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த அணிக்கு ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. ஓபிஎஸ் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த கருப்பூர் சீனி தலைமையில், அக்கட்சியின் ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் உட்பட 200-க்கும் […]

சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் லதா (45), தனது கார் ஓட்டுநருடன் சுமார் இரண்டு ஆண்டுகளாக நடத்தி வந்த ரகசிய தொடர்பு, தற்போது காவல் நிலையம் வரை சென்றுள்ளது. வெளிநாட்டில் கணவர், அமெரிக்காவில் படிக்கும் மகள் என வாழ்க்கையை வாழ்ந்து வந்த லதாவிற்கும், அவரது 22 வயது கார் ஓட்டுநர் ராமுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக காருக்குள்ளேயே நூதன முறையில் காதல் உறவு […]

தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மூலம் அரசுக்குக் கோடிக்கணக்கான வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியர்கள், தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 1-ம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டங்களை நடத்தி வந்த ஊழியர்கள், தற்போது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர். சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.சி., பாட்டாளி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட […]

தமிழக மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒரே தவணையாக ரூ.5,000 வழங்கி இல்லத்தரசிகளை வியப்பில் ஆழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்ததாக தனது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்றான ‘நகைக் கடன் தள்ளுபடி’ கோப்பை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. ரூ.5,000 வரவு வைக்கப்பட்ட உற்சாகத்தில் இருக்கும் பொதுமக்கள் மத்தியில், கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகள் எப்போது வீடு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மக்களின் […]

தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு அதிரடி நடவடிக்கையாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் உள்ள 1.31 கோடி பயனாளிகளுக்கும் தலா ரூ.5,000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13 அன்று காலை 5 மணிக்கே பெண்களின் செல்போன்களுக்கு வந்த மெசேஜ்கள், ஒரு நிமிடம் அவர்களை திகைக்க வைத்தன. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஒரே தவணையாக இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது […]

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பின்னடைவை தரும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தலைமை மீதான அதிருப்தியில் மாற்றுப் பாதையைத் தேடிச் செல்வது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தற்போது முன்னாள் அமைச்சர் நிலோஃபர் […]

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று திமுகவின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்தார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து நிலோஃபர் கபிலும் திமுகவில் இணைந்துள்ளார்.. முன்னதாக அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்.. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக […]

திருப்பத்தூர் மண்டலவாடி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. இந்த மாநாட்டிற்கு திறந்தவெளி வாகனத்தில் வந்த முதல்வர் ஸ்டாலினை கண்டு தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.. கருப்பு, சிவப்பு, துனை சுழற்றியபடியே திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் வடக்கு மண்டலத்தை செர்ந்த சுமார் 1.5 லட்சம் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ உங்களை போன்ற நிர்வாகிகளிடம் பொறுப்பை […]

கொடுங்கையூர் பொதுக்கூட்டத்தில் ஆளுநர், நடிகை குஷ்பு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை ஆபாசமாக பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டது.. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.. இது தொடர்பான வழக்கு சென்னை எழுப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி இந்த […]

தமிழகத்தில் இன்னும் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, 2030-ஆம் ஆண்டிற்குள் “குடிசைகள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை அடைவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டுவதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கித் தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் […]