இளம் தலைமுறையினர் தங்களது அன்றாட வாழ்க்கையில் விளையாட்டையும் உடற்பயிற்சியையும் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இந்திய ஹாக்கி உலகின் ஈடு இணையற்ற சாதனையாளரான மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விளையாட்டு என்பது போட்டிகளில் […]

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 400 ஆக அதிகரித்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ஆரம்பக்கட்டத்தில் 103 தமிழர்கள் மட்டுமே சிக்கியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கத்தில், சென்னை மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் பயண முகமைகள் மூலம் 103 பேர் […]

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், பாக்கெட் பால் விற்பனையை தடுத்து தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்குமாறு தனியார் பால் நிறுவனங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மலைப்பிரதேசங்களில் பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்தக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, பிளாஸ்டிக் கவர்களில் பால் விநியோகம் செய்வதற்கு மாற்றாக புதிய வழிகளைக் […]

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சீன எல்லைப் பகுதியில் சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் பாதுகாப்பாக உள்ள நிலையில், 320 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்டுள்ள தகவலில், மானசரோவர் புனித யாத்திரைக்காக சென்ற […]

தமிழ்நாட்டில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளைத் தவிர்த்து, பிற அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தை முழுமையாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சென்னையில் சாதாரண மற்றும் டீலக்ஸ் (சொகுசு) கட்டணப் பேருந்துகள் என மொத்தம் 3,633 பேருந்துகளிலும், வெளி மாவட்டங்களில் இயக்கப்படும் நகர மற்றும் சாதாரண கட்டணப் பேருந்துகள் உட்பட 9,000-க்கும் […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், ஓசூர் புதிய சர்வதேச விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓசூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில், “ஓசூரில் புதிய விமான நிலையம் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட குரல் அல்ல; நிலத்தை இழக்க அஞ்சும் ஓசூர் விவசாயிகளின் ஒட்டுமொத்த குரல். பரந்தூர் […]

மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அவதார தினமே ஆண்டுதோறும் ‘கிருஷ்ண ஜெயந்தி’ அல்லது ‘கோகுலாஷ்டமி’ என பக்தர்களால் பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் ‘கிருஷ்ண ஜென்மாஷ்டமி’ என அழைக்கப்படும் இந்நன்னாளில், பக்தர்கள் நாள் முழுவதும் விரதமிருந்து நள்ளிரவில் பாலகிருஷ்ணனை வழிபடுவது வழக்கம். கிருஷ்ணர் அவதரித்த மதுரா மற்றும் அவர் வளர்ந்த பிருந்தாவனத்தில் இத்திருவிழா பிரம்மாண்ட ஆன்மீக விழாவாகக் களைகட்டும். இந்து சாஸ்திரங்களின்படி, ஆவணி மாத தேய்பிறை […]

அஷ்டமா சித்திகளை வசப்படுத்தி, மூலிகை மருத்துவம், ரசவாதம், யோகம் மற்றும் ஞானத்தில் சிறந்து விளங்கிய சித்தர்களின் உலகம் இன்றும் வியக்கத்தக்க மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளது. காலத்தை வென்று சூட்சும வடிவில் இன்றும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் சித்தர்களின் ஆற்றல் நிறைந்த முக்கியமான 6 ஆன்மீக திருத்தலங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். பொதிகை மலை : சித்தர்களின் தலைமை குருவான அகத்திய முனிவர் வாழ்ந்து அருள்பாலித்த தலம் பொதிகை மலை. நெல்லை […]

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கட்டையம்பட்டியில் FQL என்ற ஆன்லைன் முதலீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 65 நாட்களில் ரூ.1 லட்சமும், ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம் என்று இந்நிறுவனம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தது. நிறுவனத்தின் ஏஜெண்டுகளான ரமேஷ், அவரது மனைவி அனிதா, விஜய், தினேஷ் ஆகியோரை நம்பி திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி, ரெட்டியபட்டி, வத்திபட்டி உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த 30 […]

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம், வெள்ளக்குளம் வயல்வெளிப் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், […]