பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து 79 மற்றும் ராஷ்ட்டீரிய ஜனதா தள் கட்சியிடமிருந்து 3 ஆட்சேபம் மற்றும் உரிமைக் கோரல் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி […]

உள்ளூர் ஜவுளித் தொழில் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை பருத்தி இறக்குமதி வரி விலக்கு கால அவகாசத்தை நீட்டித்த மத்திய நிதி அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு திருப்பூர் தொழில் வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. “இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா திடீரென 50% என்ற அசாதாரண சுங்க வரியை விதித்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜவுளி தொழில்துறைக்கு, இந்த நீட்டிப்பு சரியான நேரத்தில் […]

இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு பெண்களின் பாதுகாப்பு என்பது ஒரு சமூகப் பிரச்சினை மட்டுமல்ல, வளர்ச்சியின் திசையை தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையாகும். இந்த சூழலில் NARI- 2025 அறிக்கை ஒரு முக்கியமான முயற்சியாகும். அதன் உதவியுடன், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அந்த அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 40% பெண்கள் தங்கள் சொந்த நகரங்களில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. மோசமான தெரு விளக்குகள் மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

ஆர்.எஸ்.எஸ் – பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், மன வேறுபாடுகள் ஒருபோதும் இருக்காது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.. மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பைப் பேணுகிறது என்றும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பாஜகவிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். “பல்வேறு விஷயங்களில், சங்கம் பரிந்துரைகளை வழங்க முடியும், ஆனால் முடிவு எப்போதும் பாஜகவிடம் உள்ளது” என்று அவர் மேலும் […]

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்த ரீட்டா என்ற 25 வயது பெண், ஓடும் பேருந்திலேயே திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ரீட்டாவுக்கு வந்த ஒரு போன் கால் அவரின் இறப்புக்கு காரணமாக அமைந்தது.. ரீட்டாவின் கணவரின் மொபைல் நம்பரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.. ஆனால் மறுமுனையில் இருந்த ஒரு பெண் தன்னை அவரின் கணவரின் ‘2வது மனைவி’ என்று அடையாளப்படுத்திக் கொண்டு பேசி உள்ளார். மேலும் அந்த […]

வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி இளம்பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் மோறடாபாத் நகரத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி, போலியான வேலை வாய்ப்புகளை முன்னிறுத்தி, இளம் பெண்களை கடத்தும் சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பல், வேலை தேடிவரும் பெண்களை குறிவைத்து, அவர்களை வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பாதிக்கப்பட்ட பெண்களில் 3 பேரும் உத்தரப்பிரதேசம் மற்றும் […]

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், மதுரவாடா பகுதியில் உள்ள ஸ்ரீ தனுஷ் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவனின் கையை உடைத்ததாக ஒரு ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் இரும்பு மேசையால் மாணவனை கொடூரமாக தாக்கியதில்.. அவரின் கை உடைந்துள்ளது.. மேலும் மாணவனின் கையில் பல எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் கை மூன்று இடங்களில் உடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் மெடிகவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு அறுவை […]

ஜிஎஸ்டி கவுன்சில் பல பிரபலமான உணவுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதால், சில பொருட்களின் விலை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனால் நுகர்வோர் விரைவில் தங்கள் வீட்டுச் செலவுகளை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.. வெண்ணெய், கண்டென்ஸ்டுபால், ஜாம், காளான்கள், பேரீச்சம்பழங்கள், நட்ஸ் போன்ற பொருட்கள் தற்போதைய 12 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்திலிருந்து வெறும் 5 சதவீதமாக மாற வேண்டும் என்று ஃபிட்மென்ட் கமிட்டி முன்மொழிந்துள்ளது. […]