பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி மற்றும் அவரின் மனைவி நீதா அம்பானியின் சம்பளம் எவ்வளவு? அம்பானியின் பிள்ளைகள் எவ்வளவு சம்பாதிக்கின்றனர் தெரியுமா? இந்தியாவின் பெரும் பணக்காரரரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி, குடும்பத்தின் முக்கிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பின்படி, அனந்த் இப்போது ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 முதல் 20 கோடி வரை சம்பளம் பெறுவார் என்று கூறப்படுகிறது. மேலும் […]

மதுபான மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இன்று மீண்டும் சோதனை நடத்திய நிலையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா கைது செய்யப்பட்டுள்ளார்.. சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா மீதான மதுபான மோசடியில் தொடர்புடையதாகக் கூறப்படும் பணமோசடி விசாரணை தொடர்பாக, அமலாக்கத்துறை (ED) இன்று மீண்டும் அவரின் வீட்டில் சோதனை நடத்தியது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், […]

பஹல்காம் தாக்குதலை நடத்திய தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)-ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அமெரிக்காவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த முடிவு இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்கின்றன என்பதை நிரூபித்துள்ளது என்றும் கூறினார். எஸ் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்க பதிவில் “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து […]

மத்திய அரசு புதிய வாகன விதியை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத அனைத்து வாகன உரிமையாளர்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.. புதிய மோட்டார் வாகன விதி அங்கீகரிக்கப்பட்டால், சுங்கக்கட்டணம் பாக்கி நிலுவையில் இருந்தால், வாகன ஓட்டிகள், பதிவு புதுப்பித்தல், காப்பீடு, உரிமை பரிமாற்றம் அல்லது தகுதி சான்றிதழ்கள் போன்ற முக்கியமான சேவைகளைப் பெற முடியாது. இந்த நடவடிக்கை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை […]

கடந்த ஜூன் 4ஆம் தேதி RCB கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றி அணிவகுப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் நிர்வாகமும், விராட் கோலியின் வீடியோ அழைப்பே முக்கிய காரணம் என்று கர்நாடக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் RCB அணி கைப்பற்றும் முதல் பட்டம் […]

தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். உலகின் தூய்மையான நகரங்கள் பட்டியலுக்கான ஆய்வு 9-வது ஆண்டாக இந்த ஆண்டும் நடந்தது. இதன்படி, 2024-25 ஆண்டுக்கான, ஸ்வச் சர்வேக்சன் எனப்படும் தூய்மையைக் கணக்கெடுக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில், நடப்பு ஆண்டில் மொத்தம் 78 விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் […]