நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5976 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 507 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், 40 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன. சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, ஜனவரி 2025 முதல் புதிய மாறுபாட்டால் 116 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. புதன்கிழமை 3 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 2 பேரும், கேரளாவில் 1 பேரும் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 1309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக […]

273 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த ஏர் இந்தியா விமான விபத்தின் AI கறும்படம் ஒன்று சோசியல் மீடியாவில் டிரெண்டாகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த […]

சிறுவன் கடத்தல் தொடர்பான வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞருக்கும் தேனியை சேர்ந்து பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்தது. இதில் அந்த பெண்ணை மீட்பதற்காக, அந்த இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் […]

கேரளாவில் உள்ள தனியார் பெட்ரோலிய நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 300 சில்லறை விற்பனை நிலைய விற்பனையாளர்களின் சங்கமான பெட்ரோலிய வர்த்தகர்கள் நலன் மற்றும் சட்ட சேவை சங்கம், தங்கள் தனியார் கழிப்பறைகளை பொது வசதிகளாக மாற்றுவதற்கான அரசாங்க உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் பேரில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் […]

செயல்பாட்டு நிலைத்தன்மை மற்றும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பெரிய அளவிலான விமானங்களின் சேவையை 15% குறைப்பதாக ஏர் இந்தியா விமானம் நிறுவனம் அறிவித்துள்ளது.சிறந்த செயல்திறனை உறுதி செய்வதற்கும், விமான நம்பகத்தன்மையைப் பேணுவதற்கும், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட அட்டவணை ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும், மேலும் குறைந்தபட்சம் ஜூலை நடுப்பகுதி வரை நடைமுறையில் […]

ஈரானில் சிக்கித் தவித்த 110 இந்திய மாணவர்கள் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடைந்துள்ளனர். இந்த மாணவர்களில் பெரும்பாலோர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்கள் உர்மியா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். மாணவர்கள் புதன்கிழமை மாலை ஆர்மீனியா மற்றும் தோஹா வழியாக டெல்லி விமானம் மூலம் வந்தனர். இருப்பினும், அவர்களின் விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் […]

இமாச்சலப் பிரதேசத்தில் 2023-ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளம், நிலச்சரிவு, பெருமழை சம்பவங்களுக்குப் பிறகு மீட்பு, மறுசீரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசின் உதவியாக ரூ. 2006.40 கோடி வழங்குவதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு, தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் மீட்பு […]

அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு , விமான நிலையங்களுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள விமானப் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வரைவு விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் முன்மொழியப்பட்ட விமான விதிகள், நேற்று (ஜூன் 18) அறிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட விமான நிலைய மண்டலங்களில் உயர வரம்புகளை மீறும் […]