இந்திய அஞ்சல் துறை மீடியா போஸ்ட் சேவையை வழங்குகிறது, இது அரசு மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை திறம்பட மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விளம்பர பொறிமுறையாகும். மீடியா போஸ்ட் மூலம் அஞ்சல் எழுதுபொருட்கள், தபால் அலுவலக பாஸ்புக்குகள், தபால் வளாகங்கள், தபால் நிலையங்களில் நிறுவப்பட்ட டிவிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பலவித சேவைகளில் விளம்பரம் செய்ய முடியும். இந்தியா போஸ்ட்டின் விரிவான நெட்வொர்க் […]

உலகின் மிகப்பெரிய இணையதள நிறுவனமான கூகுள் நிறுவனம் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறது. தங்களது பயனர்களுக்கு அவ்வபோது புதிய அப்டேட்டுகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில், விரைவில் அறிமுகம் ஆக உள்ளது ஹெல்ப் மி ரைட் என்ற AI வசதி. ஹெல்ப் மி ரைட் என்றால் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். கடந்த புதன்கிழமை கூகுள் I/O-2023 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில், […]

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ஐ மீறி சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை விற்பனை செய்ததற்காக அமேசான், ஃப்ளிப்காட், ஸ்னாப்டீல், ஷாப்க்லூஸ், மீஷோ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகளை மீறி, அநியாயமாக வியாபாரம் செய்ததற்காக, இந்த உத்தரவை ஆணையத்தின் தலைமை ஆணையர் நித்தி கரே பிறப்பித்துள்ளார். பொதுவாக கார்களில் பயணம் செய்யும் போது ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரும் சீட் […]

இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்தின் தொடர்ச்சியாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின்  ஐட்ரோன் முன்னெடுப்பின் கீழ் ட்ரோன்கள் மூலம் ரத்தம் விநியோகம் செய்வதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தொடக்க சோதனையின்போது, ஜிஐஎம்எஸ் மற்றும் எல்ஹெச்எம்சி-யிலிருந்து 10 யூனிட் ரத்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையானது விவசாயம், பாதுகாப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் சுகாதாரப் […]

அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா போன்ற பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பிரபல ப்ரொபஷனல் சமுக வலைத்தளமான LinkedIn நிறுவனமும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பல மென்பொருள் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது வாடிக்கையாகவே கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமேசான், ட்விட்டர், […]

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் இனி QR கோடு ஸ்கேன் செய்து சொத்து வரி செலுத்தலாம். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலமாக QR கோடு ஸ்கேன், விபிஎன் முகவரி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், காசோலை மற்றும் வரைவோலை வாயிலாக தங்களது சொத்துவரியினை எளிதாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை […]

இந்தியாவின் முன்னோடி வாகனத் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது மஹிந்திரா மோட்டார்ஸ். பயணிகள் வாகனம் மட்டுமின்றி, வணிகப் பயன்பாட்டு வாகனங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், மஹிந்திராவின் பிக்அப் வாகனம் ட்ரக் ரக வாகனங்களில் வெற்றிகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நகர்ப்புற சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் கொண்டு வரவும், தயாரிப்பு பொருட்களை கொண்டு செல்வதற்கும் இந்த வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய மேம்பட்ட பொலிரோ […]

சர்வதேச தொலைத்தொடர்பு போக்குவரத்து குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச குறுஞ்செய்தி, உள்நாட்டு குறுஞ்செய்தி இலக்கணம் குறித்து பரிந்துரை அளிக்குமாறு தொலைத் தொடர்புத் துறை 30.08.2022 அன்று கேட்டுக்கொண்டு இருந்தது. தொலைத் தொடர்பு கட்டமைப்பில் உள்ள செயல்பாடு போக்குவரத்து அல்லது தொலைத்தொடர்பு போக்குவரத்து என்று அழைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு போக்குவரத்தில் குரல் அழைப்பு, குறுஞ்செய்தி உள்ளிட்ட வகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தொலைத்தொடர்பு போக்குவரத்தில் உள்நாட்டுப் […]

ஐபிஎம் நிறுவனத்தில் 7800 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அமேசான், ட்விட்டர், கூகுள் என மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களையும், ஆல்பபெட் நிறுவனம் 12,000 ஊழியர்களையும், […]

பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் குடியிருப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது. எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ என மக்கள் கவலைப்பட்டனர். இப்போது, இந்த வசதியின் […]