திங்கட்கிழமை, ஓமன் நாட்டு பகுதியில், வெடிகுண்டு ஏந்திய ட்ரோன் படகு ஒன்று மார்ஷல் தீவுகள் கொடி ஏந்திய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது மோதி தாக்கியதாக ஓமன் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த ஒரு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா–இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நெருப்பாக இருந்த பதற்றம், தற்போது உலகையே உலுக்கும் மகா யுத்தமாக வெடித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட முயன்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிரடி தாக்குதலை தொடங்கின. ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த கூட்டு தாக்குதலில் ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் […]
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ளது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 76 வயதான பிரதமர் நெதன்யாகு அங்கு இருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆவது தாக்குதல் அலையில், ‘கெய்பார் ஷெகான்’ (Kheybar Shekan) என்ற கண்டம் விட்டு […]
ஈரானின் ஷஹேத்-136 ட்ரோன்கள், சவுதி அரேபியா நாட்டில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, சவூதி அராம்கோ நிறுவனம் தனது ராஸ் தனுரா சுத்திகரிப்பு (Ras Tanura Refinery) நிலையத்தில் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த தாக்குதலால் அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தீ மிகக் குறுகிய அளவில் இருந்ததாகவும், விரைவாக கட்டுக்குள் […]
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் முழுவதும் பரவலான தாக்குதல்களை நடத்தியது… ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தளங்கள் குறிவைக்கப்பட்டதுடன், பல போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பிறகு, இந்த இராணுவ நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இந்த தாக்குதல்களால் நாடு முழுவதும் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், தலைநகர் தெஹ்ரான் நகரின் மேல் புகை மேகங்கள் எழுந்ததாகவும் தகவல்கள் […]
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 149 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பெய்ரூத் நகரின் தெற்கு புறநகரங்கள் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் நடைபெற்ற இஸ்ரேல் எதிரி வான்வழித் தாக்குதல்களால், ஆரம்ப […]
அமெரிக்காவின் F-15 போர் விமானம் ஒன்று குவைத் நாட்டில் விழுந்து நொறுங்கியதாக ஈரான் கூறியுள்ளது. இந்த விபத்துக்கு முன், விமானத்தில் இருந்த அமெரிக்க விமானி பராசூட் மூலம் வெளியேறியதாக சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கும் காட்சியை ஈரான் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.. எனினும் இந்த விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.. சமூக ஊடகங்களில் […]
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC) தலைமையகத்தை அழித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த தாக்குதல், அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இந்த தாக்குதல் குறித்து, “பாம்பின் தலையே துண்டிக்கப்பட்டது” என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் “கடந்த 47 ஆண்டுகளில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC) 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொன்றுள்ளது. நேற்று, அமெரிக்கா நடத்திய […]
அமேசான் காடுகளின் மையத்தில், அமோன்டாவா என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர். அனைத்து பழங்குடியினருக்கும் ஒரு வாழ்க்கை முறை இருந்தாலும், இவர்கள் அனைவரிடமிருந்தும் வேறுபட்டவர்கள். மனித சமூகத்தின் பொதுவான கருத்துக்களை சவால் செய்யும் தனித்துவமான வாழ்க்கை முறையை அவர்கள் கொண்டுள்ளனர். அதைப் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே பார்க்கலாம்.. அமோன்டாவா பழங்குடியினரின் விசித்திரமான உலகம்! இந்த பழங்குடியின மக்கள் நாட்காட்டியைப் பயன்படுத்துவதில்லை, அவர்களின் பிறந்தநாள் அவர்களுக்குத் தெரியாது, நேரம் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. […]
அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கு ஆசியாவில் வேகமாக மாறிவரும் சூழ்நிலையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 28 அன்று ஈரானில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், பல வளைகுடா நாடுகளில் நடைபெற்ற தாக்குதல்களும் விவரிக்கப்பட்டன. மேற்கு ஆசியா முழுவதும் வசித்து […]

