காயம் இல்லை என்பதற்காக செய்த குற்றத்திலிருந்து விடுவிக்க முடியாது….! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு….!

டெல்லியில் நடைபெற்ற ஒரு கற்பழிப்பு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில், 4½ வயது சிறுமியை ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.

அதாவது, குற்றம் சுமத்தப்பட்ட நபரின் தண்டனையை உறுதி செய்த சமயத்தில், நீதிபதி அமித் பன்சால் இந்த கருத்தை கூறியுள்ளார். அந்த சிறுமியின் அண்டை வீட்டுக்காரர் தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், ஒரு அதிரடி கருத்தையும் கூறியுள்ளது.


அதாவது, இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இல்லாத ஒரே காரணத்திற்காக பாலியல் துன்புறுத்தல் நடைபெறவில்லை என்று கருத இயலாது என்று கூறியிருக்கிறது.

அதோடு, இந்த ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு, குற்றம் சுமத்தப்பட்டவரின் தண்டனையிலிருந்து அவரை விடுவித்து விட முடியாது என்று கூறியுள்ளார் நீதிபதி.

Next Post

இங்கே பேச்செல்லாம் கிடையாது ஒன்லி ஆக்சன்….! வெளியாகி நான்கு நாட்களில் 300 கோடியை கடந்த ஜெயிலர் திரைப்பட வசூல்…..!

Tue Aug 15 , 2023
சென்ற பத்தாம் தேதி தமிழ்நாடு முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் தான் ஜெய்லர். ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் நெல்சன் பல்வேறு விதத்திலான விமர்சனங்களை பெற்றிருந்தார். அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறாத நிலையில், அடுத்ததாக சினிமா உலகில் காம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் இருந்தார் .இந்த நிலையில் தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, ஜெய்லர் […]

You May Like