fbpx

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் தானமூர்த்தியூரில் வசித்து வருபவர் தைலம்மாள் (75). சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் எல்லப்பன் இறந்து விட்டதால், தைலம்மாள் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் அதே பகுதியில் தைலம்மாளின் கடைசி மகனான மெய்வேல் அவரது மனைவி செல்வியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தைலம்மாளுக்கும், செல்விக்கும் அடிக்கடி ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு சண்டை […]

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை.. 2 வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது.. கொரோனாவில் இருந்து படிப்படியாக உலகம் மீண்டு வந்த நிலையில், கடந்த நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் மாறுபாடு உலகை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள ஒரே வழி தடுப்பூசி தான் என்று கூறப்பட்டாலும், […]

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பழங்குடியினப் பெண் ஒருவரை, நில அபகரிப்பாளர்கள் எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குணா மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராம்பியாரி சகாரியா (38) என்ற பெண்ணின் குடும்பத்திற்கு, அரசு நலத்திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிலத்தை மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். பின்னர் அந்த நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு சகாரியாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ராம்பியாரி சகாரியா, தனது […]

சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறினார். நபிகள் நாயகம் பற்றிய கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பாரதிய ஜனதா கட்சி முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்து, அவர் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் இடம் பெற்றிருந்தவர் நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா ஆவார். இவர், டெல்லியில் […]

காரைக்கால் மாவட்டத்தில் காலராவால் இரண்டு பேர் உயிரிழந்த எடுத்து காலரா பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அதிக அளவில் பரவி வருகிறது. அரசு பொது மருத்துவமனையில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள், அதிக அளவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர் மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை பெறுவோர் […]

மராட்டிய மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் உமேஷ் கோல்கே (54). இவர் மருந்து கடை வைத்துள்ளார். உமேஷ் கோல்கே நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்தை கூறிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக, வாட்ஸ்அப் குழுக்களில் தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் இது பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அவர் கடந்த மாதம் 21-ந் தேதி மருந்து கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று […]

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ […]

இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய உள்துறை […]

சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் சராசரி ஒரு நாள் பாதிப்பு 15,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.. எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. கடந்த சில நாட்களாக […]

பள்ளி, கல்லூரி மாணவர்களின் வீடுகளில் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து ஆகஸ்டு 15ஆம் தேதியுடன் 75-வது ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி இந்த ஆண்டு சுதந்திர தின பவள விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சுதந்திர தின பவள விழாவையொட்டி கர்நாடக […]