சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்றத் திணறும் தவெக அரசு, ரூ.1200 கோடி செலவில் அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முயல்வது கண்டனத்திற்குரியது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி இருப்பதாகக் கூறிவிட்டு, […]
தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவையர் உள்ளிட்டோருக்கான மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து பயனாளிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 12 வகையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மொத்தம் 35.37 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இதில் சுமார் 15.56 லட்சம் பயனாளிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான (செப்டம்பரில் வழங்கப்படும்) ஓய்வூதியத் தொகை […]
இளம் வயதினராக இருந்து, தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, புகைப்பிடிக்காமல் இருப்பது பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்றாலும், அது புற்றுநோயில் இருந்து முழுமையான பாதுகாப்பைத் தராது. எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பவர்கள், தங்களுக்கு தீவிரமான நுரையீரல் புற்றுநோய் வராது என்று எண்ணி, தொடர் உடல்நலப் பிரச்சனைகளைப் புறக்கணிக்கக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மும்பை சைஃபி மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கலால் இது குறித்துக் கூறுகையில், […]
பிரபல நடிகர் யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான ‘டாக்சிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-Ups) திரைப்படம், இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி நெருக்கடியைச் சந்திக்கும் படமாக மாறி வருகிறது. இப்படம் உலகளவில் சுமார் ரூ. 300 கோடி வரை நஷ்டம் அடையக்கூடும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஆங்கிலப் […]
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் விலகியதை தொடர்ந்து, அந்த இடத்தை நிரப்புவது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற தவறியதை அடுத்து, சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் வெளிநாட்டு நபர் ஒருவரை நியமிக்க அணி நிர்வாகம் சில திட்டங்களை வகுத்திருந்தாலும், […]
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் பங்கேற்ற ஐந்து நாள் கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவடைந்த சில மணி நேரங்களிலேயே, வட கொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கடல் நோக்கி ஏவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தலாகக் கருதப்படும் இந்த முத்தரப்புக் கூட்டுப் பயிற்சிகளுக்கு பியாங்யாங் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த ஏவுகணைத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் […]
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் மிளகாய் பொடியை வீசி ரூ.4.53 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக்கர்தாரா காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள இந்த வங்கியில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வங்கிச் செயல்பாட்டு நேரம் முடிந்த பிறகு கடந்த வியாழக்கிழமை மாலை […]
சமூக வலைதளங்களில் தற்போது 1980களின் ரெட்ரோ தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட AI புகைப்பட டிரெண்ட் வேகமாக வைரலாகி வருகிறது. பழைய கால உடைகள், ஹேர் ஸ்டைல் மற்றும் விண்டேஜ் புகைப்படங்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பலரும் தங்களது புகைப்படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த டிரெண்டில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் லெஜண்ட் சரவணனும் தற்போது 80ஸ் ரெட்ரோ […]
நம்மில் பலர் பல ஜோடி காலணிகளை வைத்திருந்தாலும், கடுமையான வெயிலில் வெறும் கால்களுடன் சாலையில் ஓடும் குழந்தைகளையும், தேய்ந்துபோன செருப்புகளுடன் நடப்பவர்களையும் தினமும் காண்கிறோம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவரான அர்ஹன் ரெட்டி (Arhan Reddy), தனது கவனத்திற்கு வந்த இந்த எளிய மக்களின் துயரத்தை ஒரு பெரிய மாற்றமாக மாற்றிக் காட்டியுள்ளார். தொழிற்சாலைகளில் வீணாகும் ‘ஈவா’ (EVA) எனப்படும் ரப்பர் கழிவுகளை மறுசுழற்சி செய்து, ஏழை எளிய குழந்தைகளுக்குச் செருப்புகளை […]
உலக மக்கள் தொகையில் பாதியளவையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தையும் கொண்டுள்ள பிரிக்ஸ் (BRICS) அமைப்பு வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், உறுதியான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளாக மாற்றப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் வணிக மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 2006-ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் கூட்டு ஜிடிபி உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை விட சுமார் 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாகத் […]

