ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஐபோன் அறிமுக விழா இந்த ஆண்டு நிறுவனத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அமைய உள்ளது. செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் நிகழ்வில், புதிய ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களுடன், ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, புதிய ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்களும் இடம்பெற உள்ளன. “Surprise and Shine” என்ற பெயரில் […]

நடிகர் ரவிமோகனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் அவர் மீண்டும் ஒன்றாக இருக்கும் காட்சிகள் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருவரும் கோவாவில் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது கவனம் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவிமோகன், தனது குடும்ப வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளால் கடந்த சில காலமாக செய்திகளில் இடம்பெற்று […]

மாண்டி தொகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படாத விவகாரம், பாஜக எம்பி கங்கனா ரனாவத்தை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. பணிகளுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டும், பல திட்டங்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதிகாரிகளின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார். இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டியில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில், தொகுதியில் நடைபெற்று வரும் மத்திய அரசு திட்டங்கள் மற்றும் […]

நீதிமன்றத்தில் திருமணப் பதிவு நடைபெறவிருந்த நேரத்தில் மகளை மீட்க தாய் நேரடியாக களமிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இளைஞர் ஒருவர், வீட்டின் உரிமையாளரின் மகளுடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அவரை அழைத்துச் சென்று நீதிமன்றத் திருமணம் செய்ய முயன்றதாக பெண்ணின் பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. மகள் திடீரென வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்த பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது […]

ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “யார் மீதும் பழிவாங்கும் நோக்கில் சும்மா பொய்யான வழக்குகளை பதிவு செய்ய முடியாது. போதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே புலனாய்வு அமைப்புகள் வழக்கு பதிவு செய்கின்றன. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு அரசு பணிக்கு பணம் வாங்கி ஆள் சேர்த்த […]

கனவுகளைத் தொடர வயது ஒருபோதும் தடையாக இருக்க வேண்டியதில்லை. வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் படிப்பை நிறுத்தியிருந்தாலும், மீண்டும் கற்றலைத் தொடங்குவதற்கான வாய்ப்பு எந்த வயதிலும் கிடைக்கலாம். இதற்கு அழகான உதாரணமாக மும்பையைச் சேர்ந்த ஒரு தாயின் புதிய கல்லூரி பயணம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த தன்வி மல்ஹாராவின் தாய் டாக்டர் நளினி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாணவியாக கல்லூரிக்குச் சென்றுள்ளார். மகள் கல்லூரிக்குச் செல்லும் […]

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டைச் சுற்றி திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அவரது வீடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதலே தில்லைநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கே.என்.நேருவின் வீட்டுக்குள் சென்று சோதனையை தொடங்கினர். வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் வழக்கு […]

கேரள மாநிலம் திருச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய கோர விபத்தில், காரில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளா எம்.பி.யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]

சென்னையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொலை சம்பவம் நகரின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது. அடையாறு வண்ணாந்துறை பகுதியில் தவெக நிர்வாகி கண்ணன் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கண்ணனை இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் திடீரென சுற்றிவளைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கண்ணன் ஓடியபோதும், அந்த கும்பல் […]

உலக நாடுகள் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், ஏற்கெனவே ஏற்பட்டுள்ள சில பாதிப்புகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாத நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக பனிப்பாறைகள் உருகுவது, கடல் மட்டம் உயர்வது, உயிரினங்கள் அழிவது போன்ற மாற்றங்கள் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை நெருங்குவது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் […]