மத்தியப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவரை தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்று நான்கு மாணவிகள் தாக்கியதாகவும், அங்கு அவரை மிரட்டி ஒரு ஆண் மாணவருடன் தொடர்பில் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு விவரம் தெரியவந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு அதே கல்லூரியில் படிக்கும் ஆண் மாணவர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 65 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் புகாரைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், தலைமறைவாக இருந்த அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஊத்தங்கரை அருகே கிராமப் பகுதியில் வசித்து வருபவர் சின்னராஜ் (65). கால்நடை மருத்துவமனையில் பராமரிப்புத் துறை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீட்டில் இருந்தபோது அப்பகுதியில் விளையாடும் […]

ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசியப் போட்டிகளின் தொடக்க விழாவில், இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வீரர்களாக இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் குண்டு எறிதல் சாம்பியன் தஜேந்தர் பால் சிங் தூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியக் குழுவின் தலைமை அதிகாரி சகதேவ் யாதவ், மனு பாக்கரின் பெயரையும், இந்திய தடகளக் கூட்டமைப்பு தஜேந்தர் பால் சிங்கின் பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2024 பாரிஸ் […]

UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் புதிய கட்டணத்தை வணிகர்கள் வசூலிப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அக்டோபர் 15 முதல் புதிய Merchant Discount Rate (MDR) நடைமுறை அமலுக்கு வர உள்ள நிலையில், இந்தக் கட்டணம் வாடிக்கையாளர்களின் மீது கூடுதல் சுமையாக மாறாமல் இருப்பதற்கான கண்காணிப்பு முறையை உருவாக்க நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. MDR என்றால் என்ன? MDR என்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை […]

ஜிம்பாப்வே தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் வைபவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மாறாக, அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனைத் தொடர்ந்து ஆதரித்தது; அதற்குப் பலனாக சாம்சன் 3 போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்து அசத்தினார். பல ஆண்டுகளாக […]

பெண் என்பதற்காக மட்டுமே வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பல ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் பணிக்கு தகுதி இருந்தும் நியமனம் மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பெண் என்பதைக் காரணமாகக் கொண்டு வேலைவாய்ப்பை மறுப்பது […]

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 சட்ட மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த சில நாட்களிலேயே பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பது கவனம் பெற்றுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பான ஒரு மசோதா மட்டும் அடுத்தகட்ட பரிசீலனைக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தொடரில் […]

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் 22 வயது பெண்ணுக்கு பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை, மிரட்டல் மற்றும் சட்டவிரோதமாக சிறை வைத்தல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இரண்டு ரயில்வே போலீசார் உட்பட 6 பேர் மீது யாதகிரி மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண், ரயில் மூலம் யாதகிரிக்கு சென்றுள்ளார். அதிகாலை […]

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில், த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவின் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 9-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், […]

மும்பை ஆன்டிலியாவில் நடைபெற்ற அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில், நீட்டா அம்பானி அணிந்திருந்த ‘ஸ்வதேஷ்’ (Swadesh) பட்டுச் சேலையை விட, தோளோடு தோள் வரை பிரம்மாண்டமாக அவரது கழுத்தை அலங்கரித்த நெக்லஸ்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கழுத்தில் ஒரு சிறிய நகைக் கண்காட்சியைச் சுமந்து வருவது போன்ற பிரம்மிப்பை அந்த நெக்லஸ் ஏற்படுத்தியது. இந்த நகை ‘ஆம்ரபாலி பாரதம்’ என அழைக்கப்படுகிறது. இது வழக்கமான முறையில் ஒட்டுமொத்தமாக வடிவமைக்கப்பட்ட […]