மகாராஷ்டிராவில் குழந்தை திருமணங்களைத் தடுக்கும் நடவடிக்கையாக, திருமண அழைப்பிதழ்களில் மணமகன் மற்றும் மணமகள் இருவரின் பிறந்த தேதிகளையும் அச்சிடுவதைக் கட்டாயமாக்குவது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. குழந்தை திருமணங்களைக் குறைப்பதற்கும், திருமணத்திற்கு முன் வயது சரிபார்ப்பு முறையை வலுப்படுத்துவதற்கும் அரசு மேற்கொண்டு வரும் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்மொழிவு ஆராயப்பட்டு வருகிறது. நேற்று சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சட்டமன்ற உறுப்பினர் அதுல் பட்ல்கல்கர் […]

ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகளை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 139AA-இன் படி, ஆதார்-பான் இணைப்பு கட்டாயமாகும். ஜூலை 1, 2017 அன்று அல்லது அதற்கு முன் நீங்கள் பான் அட்டையைப் பெற்றிருந்தால், உங்கள் ஆதார் எண்ணை அதனுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். இலவசமாக இணைப்பதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை ஏற்கனவே முடித்துவிட்டது. தற்போது, ​​ரூ. 1,000 […]

சட்டப் பேரவைக்கான மரபையும் முதலமைச்சருக்கான மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட […]

மேற்கு கொல்கத்தாவின் தாரதாலா பகுதியில் புதன்கிழமை மதியம் கட்டுமானத்தில் இருந்த 3 மாடி கிடங்கு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர், சிக்கியிருந்த 21 பேர் மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகளை ஆய்வு செய்த மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, சுமார் 12 முதல் 18 பேர் உள்ளே சிக்கியிருப்பதாகவும், அவர்கள் இந்திய ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். முதல்வர் சுவேந்து அதிகாரி இதுகுறித்து […]

வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என பெயரை சூட்ட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தாம்பரம் ரயில் நிலைய சாலை முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி ஸ்ரீஹரி நேரில் சந்தித்து கோரிக்க விடுத்த நிலையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. இந்திய நாட்டிற்காக போராடி உயர்நீத்த வீரரின் மாபெரும் தியாகத்தை போற்றும் வகையில் வேளச்சேரி […]