கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ் (41). இவர், லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பேத்தி முறையில் உள்ள இவரது உறவினரான 17 வயது சிறுமி தனியார் கல்லுாரியில் பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் தனியாக இருந்த மாணவியை கோவிந்தராஜ் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மாணவி கர்ப்பமானார். கடந்த 21ஆம் தேதி இரவு மாணவிக்கு கடுமையான வயிற்று வலி […]

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டிருந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்குச் சாதகமாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 30-ஆம் தேதி வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டும் கர்நாடக அரசு அதனைச் செயல்படுத்தாததால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழகம் தனது […]

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் அமளியில் ஈடுபட்டுனர். இந்நிலையில், தவெக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “பல்லாயிரம் கோடி பறந்துபோனதா? பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்பிற்கு, “தமிழ்நாடு அவ்வளவுதான்” என்று அவதூறு பிரச்சாரம் செய்பவர்களின் கதறலுக்கு காரணம் இருக்கிறது. பிசினஸ் பார்த்துவிடலாம் என்று […]

பிரேசிலின் ஆகுவாஸ் லிண்டாஸ் டி கோயாஸ் பகுதியில், முன்னாள் மனைவியை கடத்திச் சென்று 5 நாட்களாகப் பதுங்கு அறையில் சங்கிலியால் பிணைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 டிசம்பரில் திருமண உறவை முறித்துக்கொண்ட 24 வயதான செவிலியர் எமிலியானே தமாரா, தனது இரண்டு குழந்தைகள் குறித்துப் பேசுவதற்காக முன்னாள் கணவரான அய்ல்டன் ரோட்ரிக்ஸ் டி சௌசாவை சந்திக்க சென்றபோது மாயமானார். அவரை […]

கள்ளக்காதல் விவகாரங்களில் கணவன் அல்லது மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பல நேரங்களில் குடும்பப் பிரச்சினையாக மாறும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் கணவர், கள்ளக்காதலன் என இருவருடனும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என பெண் ஒருவர் தெரிவித்த சம்பவம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் மஹ்மூதாபாத்தைச் சேர்ந்தவர் சுபம் வர்மா. இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், […]

தமிழ் திரையுலகில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. இதைத்தொடர்ந்து சில தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்த அவர், பின்னர் திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தனது தந்தையின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு சமீரா ரெட்டி பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. […]

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள கஸ்தூரி, சமூக மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியுடன் தொடர்புடைய பெரிய திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக கைவிடுவது சரியான முடிவாக இருக்காது என தெரிவித்தார். குறிப்பாக, […]

பெண்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்தாமல் செல்லக்கூடிய அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுவரை குறிப்பிட்ட சேவைகளில் மட்டும் வழங்கப்பட்டு வந்த இலவச பயண வசதி, மாநகரம் முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் வரை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். புதிய விரிவாக்கம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். […]

தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான புதிய கணக்குகள் உருவாகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக திமுக, பாஜக, அதிமுக, விசிக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் எதிர்கால நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் மணி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியலில் உருவாகக்கூடிய புதிய கூட்டணி வாய்ப்புகள் […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட 3 தமிழர்களின் உடற்கூறாய்வு குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தார். அப்போது, கர்நாடக […]