வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ராஜக்கல் கிராமம் கூத்தாண்டவர் நகரை சேர்ந்தவர் 48 வயதான விஜயகுமார். கார் டிரைவரான இவருக்கு, திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த 36 வயதான தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்த நிலையில், தற்போது இவர்களுக்கு 16 வயதான ஹரித்ராஸ்ரீ என்ற மகளும், 13 வயதான விஜயஸ்ரீ என்ற மகளும், 5 வயதான பத்ரிநாராயணன் […]

கர்நாடக மாநிலத்தில் பஸ் ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்ற மாணவர் தலை துண்டாகி பலி. தற்போதைய காலகட்டத்தில், மனிதனுக்கு மரணம் எப்போது, எப்படி வரும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. நோய்களின் காரணமாக பலர் கூட்டம் கூட்டமாக உயிரிழக்கின்றனர். அதேபோல், விபத்துகள் மற்றும் அலட்சியங்களால் ஏற்படும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல நேரங்களில், சில நொடிகளின் கவனக்குறைவினாலேயே உயிரிழப்புகள் நிகழ்வது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. […]

சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சிலவற்றை தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும், பல நேரங்களில் பெற்றோரின் கவனக்குறைவினாலேயே குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறலாம். அந்த வகையில், தற்போது டெல்லியில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பெற்றோர் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் வழங்குகிறது டெல்லி வளர்ச்சி ஆணையம் சார்பில் கட்டப்பட்ட […]

கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டம், நவல்குந்த் தாலுகாவில் உள்ள அனாசி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான பசவராஜ். மல்யுத்த வீரரான இவருக்கு, 29 வயதான பிரியங்கா என்ற மனைவி உள்ளார். கலபுரகியைச் சேர்ந்த பிரியங்காவிற்கும் பசவராஜுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், தற்போது வரை குழந்தை இல்லை. திருமணத்திற்குப் பிறகு, தான் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்த பசவராஜ், தனது மனைவியிடம் வரதட்சணை […]

இன்று நடைபெற்ற தவெக இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் அணிந்து வந்த ஆடை அனைவருடைய கவனத்தையும் பெற்றுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்தனர். அதன் பிறகு அதிமுக கட்சியை சேர்ந்த பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் […]

முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்த விவகாரம். தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்று பெரும் பரபராப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுக்கு எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என அதிமுக தலைமை சார்பாக தேர்தல் ஆணையத்தில் அதிரடியாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்த […]

மாலை நேரத்தில் ஒரு கப் சூடான டீயுடன் நல்ல ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. குறிப்பாக பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகள், வீட்டில் என்ன சாப்பிடலாம் என்று எதிர்பார்த்து வருவது வழக்கம். அந்த நேரத்தில் அவசரமாக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த சிப்ஸ், பிஸ்கட்கள் போன்றவற்றை கொடுத்து விடுகிறோம். ஆனால் அவை குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, முடிந்தவரை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை […]

சென்னை பல்லாவரம் அருகே மருமகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் சம்பவத்தில் மாமனார் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பல்லாவரம், அனகாபுத்தூர், கஸ்தூரி பாய் நகரை சேந்தவர் 58 வயதான பெருமாள். மீன் வியாபாரம் செய்து வரும் இவருக்கு 32 வயதான மணிகண்டன் என்ற மகன் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனுக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த மீனா என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. 28 […]

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ .சண்முகம் விரைவில் தேர்தல் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தான் தெரிய வருகிறது என கூறினார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தவெக-விற்கு வாக்களித்து புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், தங்களால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போதைய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை […]

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் மாறிவிட்டது என்று கூறலாம். அவர்கள் சுற்றியுள்ள சூழல் முழுவதும் முன்னேற்றத்திற்கானதாக இல்லாமல், பல்வேறு கவனச்சிதறல்களை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக செல்போன் மற்றும் சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகளவில் அடிமையாகி, அதிலுள்ள உள்ளடக்கங்களை மட்டுமே அதிகம் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் பாடப்புத்தகத்திலேயே சினிமா பாடல் […]