மேற்கு ஆசியாவில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான மோதல்களால் ஏற்பட்டுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் “ஒரு குடும்பத்திற்கு ஒரு எரிவாயு இணைப்பு” (One Household, One Gas Connection) என்ற கொள்கையை அரசு செயல்படுத்தி வருகிறது. உங்கள் வீட்டில் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு இருந்தால், உங்கள் வீட்டு உபயோகத்திற்கான LPG எரிவாயு […]

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக கடந்த 10-ம் தேதி பதவியேற்றார்.. முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே 200 யூனிட் மின்சார இலவசம் திட்டத்திற்கான கோப்பில் விஜய் கையெழுத்திட்டார்.. இந்த புதிய திட்டத்தின் கீழ் வீடுகளில் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு அடுத்த 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் வெளியிடப்பட்டது.. இந்த நடைமுறை கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.. […]

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து நீட்-யுஜி தேர்வை ரத்து செய்ததற்காக சனிக்கிழமையன்று அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் காந்தி கூறினார். தனது எக்ஸ் பக்கத்தில் […]

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), ஜூலை 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘மூன்று மொழி விதி’யைக் கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், 10-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழிக்கான வாரியத் தேர்வு (Board Examination) எதுவும் நடைபெறாது. “ஜூலை 1, 2026 முதல், 9-ஆம் வகுப்பிற்கு, மூன்று மொழிகளைப் பயில்வது (R1, R2, R3) கட்டாயமாக்கப்படுகிறது; இதில் குறைந்தது இரண்டு மொழிகளாவது இந்தியாவின் தாய்மொழிகளாக (native Indian languages) இருக்க வேண்டும்,” […]