ரஷ்ய அதிபர் புடின் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.. நேற்று மாலை 7:30 மணியளவில் பாலம் விமான நிலையத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் மோடி ஜனாதிபதி புடினுக்கு அவரது இல்லத்தில் இரவு விருந்தளித்தார். இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் புடின் உரையாற்றினார்.. அப்போது […]

பிரபல பேச்சாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகிய பின் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர் புதிய கட்சியை தொடங்கிய போது அதன் பெயரில் திராவிட அண்ணா பெயர்கள் இல்லாததால் அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இடத்தில் தனக்கு வேலை இல்லை எனக்கூறி இனி அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறினார்.. பின்னர் மேடைகளில் திராவிட கொள்கைகளை […]

பெங்களூருவில் ஓடும் மெட்ரோ ரயில் முன் குதித்து ஒருவர் உயிரிழந்தார், இதனால் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. கெங்கரி நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடனத்து.. இதுகுறித்து தகவலறிந்த உடனேயே, கெங்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரை அடையாளம் காணத் தொடங்கினர். அவர் ஏன் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மைசூரு சாலைக்கும் சல்லகட்டாவுக்கும் இடையிலான சேவைகள் […]

திமுக எம்.பி. கனிமொழி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் மத நல்லிணக்க சூழலை சீர் குலைக்க பாஜக, ஆர்.எஸ்,எஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.. திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது.. 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள படி, வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.. ஆங்கிலேயர் […]

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தனது நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.. இந்த நிலையில் விமானப் பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு குறித்த தனது வழிமுறைகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றது. தகுதிவாய்ந்த ஆணையத்தின் (CA) ஒப்புதலைத் தொடர்ந்து, முந்தைய உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக […]