265 உயிர்களை காவு வாங்கிய அகமதாபாத் விமான விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். பாஜகவில் இருந்தாலும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வரும் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக பதிவிட்டு […]

அகமதாபாத் ஏர் இந்திய விமானம் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதறி கிடப்பதால், அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருப்பதாக உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் கூறுவது காண்போரை கண்கலங்க வைக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்  சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் (AI171), நேற்று (ஜூன் 12) புறப்பட்ட சில விநாடிகளுக்குள் விபத்துக்குள்ளானது. விமானம் வானில் […]

2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு […]

நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டத்தின் கீழ் 10 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டில் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்துடன் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டத்தின் கீழ் 10 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயனாளியாக […]

அரசு வேலைவாய்ப்பு நோக்கில் எந்தெந்த படிப்புகள் இணையானவை என உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. எம்பிஏ ஓட்டல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பானது தமிழக அரசின் சுற்றுலா அலுவலர் பதவிக்கான கல்வி தகுதிகளில் ஒன்றாக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலா பாடத்துடன் கூடிய முதுகலை படிப்புக்கு சமமாக கருதப்படும். அதேபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம். (அக்கவுன்ட்டிங் & ஃபைனான்ஸ்) படிப்பு, பி.காம். (பொது) பட்டப் படிப்புக்கு சமமானது என தமிழக அரசு […]

ஈரானில் உள்ள டஜன் கணக்கான இராணுவ மற்றும் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்த போர், தற்போதும் தொடர்கிறது. இந்தப் போரின்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, மற்றொரு மேற்காசிய நாடான ஈரான் […]

தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளின்படி, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், […]

ஆப்பிள் நிறுவனம், கடந்த திங்கட்கிழமை தனது WWDC 2025 மாநாட்டில் iOS 26 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தியது. இதோடு இதர பல முக்கிய அம்சங்களையும் அறிமுகம் செய்தது. ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று இந்த WWDC மாநாடு. ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் இந்த மாநாட்டில், இந்நிறுவனம் தயாரித்துள்ள புதிய சாப்ட்வேர் மற்றும் தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யும். இந்த கூட்டத்தின் பின்பு ஆப்பிள் பங்குகளின் நிலை […]

மருத்துவ உலகம் நீண்ட காலமாக எதிர்நோக்கிய பிரச்சனை முன்பதியில்லாத ரத்த தேவை. இதற்கு தீர்வாக, ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக செயற்கை இரத்தம் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இரத்தம் அனைத்து ரத்த வகைகளுக்கும் பொருத்தமானது என்றும், பரிமாற்றத்திற்கு முன் ABO/Rh வகை பொருத்தம் பார்ப்பதைத் தவிர்க்கச் செய்யக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், பெரிய அளவிலான உற்பத்தி மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சாதனைகள் இருந்தாலும், விரிவான பயன்பாட்டிற்கு இது இன்னும் […]