தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை விவாதங்களின் போது, ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடையே காரசாரமான அரசியல் விவாதங்களும் வாக்குவாதங்களும் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது. காலை 9:30 மணிக்கு தொடங்கும் அவையின் நேரலை காட்சிகள் பல்வேறு யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அவை நடவடிக்கைகளின் […]

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பயன்பாடு குறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தது. பரந்தூர் திட்டத்திற்காக ஏறத்தாழ 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ள சூழலில், அந்த நிலங்களை அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். […]

தமிழ்நாட்டின் இயற்கை மற்றும் கனிம வளங்களை முறைகேடாக பினாமி பெயர்களில் குவாரி நடத்திச் சூறையாடுபவர்கள் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்றும், அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் எச்சரித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், அரசுக்கு சொந்தமான வளங்கள் பல அரசியல்வாதிகளின் பிடியில் உள்ளதாகவும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இத்தகைய குவாரி தொழில்களில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார். […]

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள கஸ்தூரி, சமூக மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியுடன் தொடர்புடைய பெரிய திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக கைவிடுவது சரியான முடிவாக இருக்காது என தெரிவித்தார். குறிப்பாக, […]

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது.. எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்காமல் போனதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது.. ஒரு வழியாக காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால் தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 120 இடங்கள் கிடைத்தன.. இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி […]

தமிழகத்தின் புதிய முதல்வராக கடந்த 10 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே விஜய் நேரம் கடைப்பிடிப்பதில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவிற்கு காலை 8.48 மணிக்கே நேரு ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார். அதன்பிறகு நடந்த எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா, சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே தலைமைச் செயலகம் வந்துவிட்டார். மேலும், […]