தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

நீட் மறு தேர்வு கோரிய மேல்முறையீட்டு வழக்கில், தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 4-ம் தேதி நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் சென்னையில் பெய்த கன மழை காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முழுமையாக தேர்வை எழுத முடியவில்லை என கூறி சென்னையை சேர்ந்த 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

பவர் பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா? அதற்கான விதிமுறைகள், அதிகாரங்கள் என்னென்ன? இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். பவர் பத்திரம் (Power of Attorney) என்பது, ஒரு சொத்தின் உரிமையாளர் தன்னால் நேரில் செய்ய முடியாத சொத்து தொடர்பான செயல்களை செய்யும் வகையில், மற்றொருவருக்கு (முகவர்) எழுத்துப்பூர்வமாக அதிகாரம் அளிக்கும் சட்ட ஆவணம் ஆகும். இது, முகவருக்கு விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. அதாவது, சொத்தை விற்பதற்கு, நிலத்தை மனைப்பிரிவுகளாக மாற்றுவதற்கு, […]

291 கி.மீ தூரத்தை கடக்க 12 மணி நேரம் எடுக்கும் உலகின் மிகவும் மெதுவான ரயில் பற்றி தெரியுமா? நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் வசதியாக மாற்றியமைத்த பல முயற்சிகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணிகளை […]

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த 2,000 தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்பிலான பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும். அதாவது, ரூ.2,500 […]

ஜூன் 29, 29ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த எஸ்.ஐ எழுத்து தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) என மொத்தம் 1,299 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். மேலும், இந்த தேர்வு […]

சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் என்ற தகவல்கள் பரவிய நிலையில், தமிழக கூட்டுறவுத் துறை அதனை மறுத்து விளக்கம் வழங்கியுள்ளது. தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் வங்கிகளில் ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என சுற்றறிக்கையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சமீபத்தில் அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் சிபில் […]

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்று மாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் ஆகிய இடங்களிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக அந்த […]

குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வீட்டில் தங்கம் வைத்திருந்தால் வருமான வரித் துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.. பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் என்றால், முதலில் நினைவுக்கு வருவது தங்க நகைகள்தான். எனவே தங்க நகைகளை பெண்கள் வாங்கி குவித்து வருகின்றனர். ஆடம்பரம் என்பதை தாண்டி தங்கம் என்பது சேமிப்பாகவும் கருதப்படுகிறது. மேலும் அவசர தேவைக்கு அல்லது திடீர் தேவைக்கு அடகு வைத்தோ அல்லது விற்றோ பணம் பெறவும் தங்கம் உதவுகிறது.. […]

சென்னையில் இன்றைய (ஜூன் 10, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் […]

ஏபிசி ஜூஸ் எல்லோருக்கும் தெரியும். இது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் கலந்து தயாரிக்கப்படும் ஜூஸ். பலர் இதை தொடர்ந்து குடிப்பார்கள். ஆனால்.. இந்த ஏபிசி ஜூஸுக்கு பதிலாக, பி.டி.பி ஜூஸ் குடிப்பது உங்களுக்கு அதிக நன்மைகளைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பீட்ரூட், தக்காளி மற்றும் சுரைக்காய் (பூசணி) கலந்து தயாரிக்கப்படும் ஜூஸை பி.டி.பி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜூஸை தினமும் குடிப்பது உங்களுக்கு எதிர்பாராத பல நன்மைகளைத் […]