பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கானை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
துபாய் செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர் விதிகளை மீறி அதிக விலையுடைய ஆடம்பர கைக்கடிகாரங்களை எடுத்துச் சென்றதற்காக அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்காக நடிகர் ஷாருக்கான் ரூ.6.83 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் விமான நிலையத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் ஷாருக்கான் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுவது இது முதல்முறை கிடையாது. கடந்த 2011ம் ஆண்டு சுங்கத்துறை அதிகாரிகளுடன் அதிக அளவிலான லக்கேஜ் உடன் எடுத்துச் சென்றதற்ககாக சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.அ வர்களுடன் நடிகர் ஷாருக்கான் கடும் வாக்குவாதம் செய்தார்.இதற்காக அவர் ரூ.1.5 லட்சம் அபராதம் செலுத்தினார். ஷாருக்கான் நடித்து வெளியாக உள்ள பத்தான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம்தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆப்ரகாம் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜவான், துங்கி மற்றும் சல்மான் கான் நடிக்கும் ’டைகர்-3’’ திரைப்படத்தில் ஒரு சிறு சிறப்பு காட்சியில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.