தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் 5 வருடம் முடிவடைந்தவர்கள். முறையாக பள்ளியில் 9ம் வகுப்பு படித்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்2 தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் எல்லோரும் தகுதி […]

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. முத்துசாமி மது விற்பனை தொடர்பாக பல்வேறு புதிய முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, 90 மிலி டெட்ரோ பேக்குகளில் மது விற்பனை செய்வது தொடர்பான ஆய்வும் நடைபெற்று வருகிறது. அதேபோல், கட்டிட தொழிலாளிகளின் வசதிக்காக காலை 7 மணி முதல் 9 மணி வரை மதுக்கடையை […]

பிரதமர் நரேந்திரமோடியை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்ற மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை நடத்தியது. அதே போன்ற ஒரு கூட்டம் பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உட்பட 24 முக்கிய […]

வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் மாநாடு அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான முக்கிய ஆலோசனை நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இந்த மாநாட்டிற்கான காவல்துறை அனுமதி பெறுவதற்காக இன்று முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் நேரில் நேரில் சென்று […]

அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்து சமீபத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரை விடுதலை செய்தது. இந்த நிலையில் தான் திடீரென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலின் 2ம் பாகத்தை மிக விரைவில் வெளியிடப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், இன்று காலை 7 மணி முதல் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் […]

கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி தன்னுடைய கணவருடன் அந்த பகுதியில் வசித்து வந்தார்.அந்த இளம் பெண் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் என்றும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில், அந்த நிறுவனத்தின் பணியாற்றி வந்த 44 வயது வாலிபருடன் அந்த இளம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உரையாடி வந்துள்ளனர். அத்துடன் […]

திண்டிவனத்தில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.48,000 ரொக்கம் மற்றும் 81 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வெள்ளிமேடு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களை குறிவைத்து, ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாத நபர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி, வேறு ஏடிஎம் கார்டை மாற்றி […]

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனி முன் அன்சாரி (37) இவர் சென்னை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு தலைவராக இருக்கிறார். அதோடு, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு ஜி ஏ ரோடு வட்டார வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அத்துடன் இவருக்கு சமீபத்தில் தான் திமுக தலைமை மாவட்ட அளவிலான பொறுப்பு வழங்கி இருந்தது. இதற்கு வாழ்த்து தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள் அந்த […]

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி, புள்ளியியல் நிபுணர் போன்ற பதவிகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன் மூலமாக, ஒட்டுமொத்தமாக 116 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதற்கான ஒதுக்கீடு அரசு அறிவிப்பின்படி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் வருவாய் துறை மூலமாக வழங்கப்பட்ட சரியான சான்றிதழை சமர்ப்பித்து இட ஒதுக்கீட்டை உறுதி […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை அருகே இருக்கின்ற கோட்லாம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி (56) கூலி தொழிலாளியான இவருடைய மகள் சுபாஷினி (28) இவருக்கும், வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது, மேலும் இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதற்கு நடுவே கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவனும், மனைவியும் பிரிந்து […]