தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை விவாதங்களின் போது, ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடையே காரசாரமான அரசியல் விவாதங்களும் வாக்குவாதங்களும் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது. காலை 9:30 மணிக்கு தொடங்கும் அவையின் நேரலை காட்சிகள் பல்வேறு யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அவை நடவடிக்கைகளின் […]

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் இனி தனியார் குத்தகை இன்றி, கோவில் நிர்வாகமே நேரடியாக பிரசாதங்களை தயாரித்துப் பக்தர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மற்றும் நடுத்தரக் கோவில்களில் லட்டு, முறுக்கு, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை உள்ளிட்ட பல்வேறு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை இப்பணிகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு […]

காவிரி படுகை பாசனத்திற்காக மேட்டூர் அணை செப்.1ம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தாமதமானதாலும், கர்நாடக அரசிடமிருந்து உரிய நீர் கிடைக்காததாலும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உரிய தேதியில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் டெல்டா விவசாயிகள் […]

நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் நிலையங்கள், சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நேபாள அரசுடன் இணைந்து இந்தியாவும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் […]

Nepal Floods | நேபாள நாட்டின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி(Bhotekoshi)ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான மக்களும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுவரை 17 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை […]

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 19 பேராக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்சா வைரஸால் ஏற்படும் சுவாசத் தொற்று நோயாகும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் H1N1 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. திடீரென ஏற்படும் […]

தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் உரிமைப் போராட்ட கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. […]

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பயன்பாடு குறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தது. பரந்தூர் திட்டத்திற்காக ஏறத்தாழ 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ள சூழலில், அந்த நிலங்களை அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். […]

ஒரு மனிதன் கடினமாக உழைத்துச் சம்பாதிக்கும் பணம் நிலைத்து நிற்கவும், தடைபட்ட பணவரவு தடையின்றி கிடைக்கவும், கைவிட்டுப்போன கடன் தொகைகள் திரும்ப வரவும் மகாலட்சுமியின் அருளோடு குரு மற்றும் சுக்கிர பகவான்களின் ஆசியும் மிகவும் அவசியமாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, பெருஞ்செல்வத்திற்கும் கோடீஸ்வர யோகத்திற்கும் அதிபதியாகக் குரு பகவானும், அன்றாட பணப்புழக்கம் மற்றும் ஆடம்பர, மகிழ்ச்சியான வாழ்விற்குரிய காரகராக சுக்கிர பகவானும் விளங்குகின்றனர். இவ்விரு கிரகங்களின் அருளையும் ஒருசேரப் பெற எளிய […]

ஒரு மனிதனின் வாழ்வு மேன்மையடையவும் குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கவும் குலதெய்வத்தின் அருள் மிகவும் இன்றியமையாதது என ஆன்மிக சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி குலதெய்வத்தின் பரிபூரண ஆசியைப் பெறுவதற்குச் சில குறிப்பிட்ட எளிய படையல் வழிபாடுகள் அளப்பரிய நன்மைகளைத் தரும் என ஆன்மிக வல்லுநர்கள் வழிகாட்டுகின்றனர். அதன்படி, குலதெய்வத்திற்கு தேங்காய் வைத்து வழிபட எடுக்கும் புதிய முயற்சிகளில் உள்ள தடைகள் அகலும்; சர்க்கரைப் பொங்கல் படைக்கப் பணவரவு […]