ஒரு சிறிய துவாரம் வழியாக மட்டுமே முழுமுதற் கடவுளான சிவபெருமானை தரிசிக்கக்கூடிய ஒரு அதிசய சிவாலயம் தமிழ்நாட்டில் அமைந்திருப்பது ஆன்மிக பிரியர்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள ‘ஒரு கோடி’ என்ற கிராமத்தில் அமைந்துள்ள இத்தலத்தில், மூலவர் ஸ்ரீ அபிராமேஸ்வரர் என்ற இயற்பெயரிலும், பக்தர்களால் அன்போடு ‘ஸ்ரீ கோடி கொடுத்த நாதர்’ என்றும் போற்றப்படுகிறார். ஒரு காலத்தில் ஒரு கோடி சித்தர்கள் ஒன்றுகூடி ஈசனை நோக்கித் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி கற்பிக்கப்படும். மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். ➣ பள்ளி மாணவர்களின் உலகளாவிய கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், புதிய ‘தமிழ்நாடு அறிவுப் பாடத்திட்டம்’ முறைப்படி அறிமுகப்படுத்தப்படும். ➣ மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ‘வாசிப்பை நேசிப்போம்’ இயக்கத்தின் கீழ், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில […]
சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் விதி சார்ந்த அறிவிப்புகளுக்கு முறைப்படி சபாநாயகர் அனுமதி வழங்கும் முன்பாக, அவற்றை சமூக வலைதளங்களிலோ அல்லது செய்தி ஊடகங்களிலோ வெளியிடக் கூடாது என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், ஊடகங்களுக்கும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். சட்டமன்றத்தில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர், பேரவை விதி 55 மற்றும் 56 ஆகியவற்றின் கீழ் அளிக்கப்படும் அறிவிப்புகள் சட்டசபை செயலாளர் அல்லது பேரவை தலைவரால் பரிசீலிக்கப்பட்டு, அனுமதி […]
தமிழ்நாடு – கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனையால், நடப்பாண்டிலும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காகவும், ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 வரை 137 நாட்களுக்குக் கால்வாய் பாசனத்திற்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கர்நாடக அணைகளில் இருந்து உரிய நீர் பங்கு வழங்கப்படாததால் நீர் […]
திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடுகள் தலைவிரித்தாடியதாகவும், கல்வி நிறுவனம் நடத்தி வரும் தன்னிடமே கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறப்பட்டதாகவும் நிதி அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சட்டமன்றத்தில் உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வியின் தரம் குறித்துப் பேசிய அவர், வெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்துவது பெருமையாகாது என்றும், கல்வியின் தரமே மிக முக்கியமானது என்றும் குறிப்பிட்டார். முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து […]
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் தீவிர அரசியலில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். அண்மை காலமாக தனது ரசிகர் மன்றங்களை வெறும் திரைப்பட கொண்டாட்டங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், தீவிரமான சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதை தொடர்ந்து, இந்த அரசியல் வருகை குறித்த தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். முதல், அண்மையில் தனது மக்கள் இயக்கத்தை பல […]
சென்னை பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் அறிவித்துள்ள முடிவு, ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அற்ப அரசியல் லாபங்களுக்காக தமிழகத்தின் தொலைநோக்கு நலன்களை அடகு வைக்கக் கூடாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் விவாதிக்கவோ தங்களது கருத்துகளைப் […]
சென்னை பரந்தூரில் அமைக்க முன்மொழியப்பட்ட 2-வது சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கிராம மக்களின் தொடர் எதிர்ப்புகள் காரணமாகக் கைவிட தவெக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற வரவு செலவுத் திட்டக் கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், 2022 ஆகஸ்ட் மாதம் பரந்தூர் விமான நிலையத் […]
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்த திட்டங்களில், பெண்களின் அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதார சுமையைக் குறைப்பதிலும் மிக முக்கியமான திட்டமாக ‘வெற்றிப் பயணம்’ திட்டம் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தைப் பெருமளவில் விரிவாக்கம் செய்யும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ என்ற புதிய திட்டம் அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் அமலுக்கு வரவுள்ளதாகச் சட்டமன்றப் பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான […]
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இக்கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்காக மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய் ” கடந்த நான்கு மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் […]

