சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஜூன் 8ம் தேதி அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்று திமுக ஐடி விங் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. இந்த அவதூறு பதிவை நீக்குவதோடு, தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் நோட்டீஸ் அனுப்பினார். […]

புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரரின் வீட்டைப் பூட்டை உடைத்துத் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் விடுத்த கோரிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் தனது சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது […]

திமுகவின் உள்கட்சி நிர்வாக கட்டமைப்பில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள 77 மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். புதிய நிர்வாக அமைப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் 110 மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்:புதிய அமைப்பில் பொதுவாக 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற […]

சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். போட்டியின் தொடக்கத்தில் கார்வானா ஆதிக்கம் செலுத்தி ஆறு புள்ளிகள் முன்னிலையில் இருந்ததால் பிரக்ஞானந்தா கடுமையான பின்னடைவைச் சந்தித்திருந்தார். இருப்பினும், இறுதி […]

நம் முன்னோர்களின் ஆன்மீக சாஸ்திரங்கள் மற்றும் வாஸ்து நம்பிக்கைகளின்படி, சில குறிப்பிட்ட பறவைகள், பூச்சிகள் மற்றும் விலங்குகள் தானாகவே நமது வீட்டிற்குள் வருவது சுப சகுனங்களாகவும், வரவிருக்கும் நன்மைகளின் அடையாளங்களாகவும் பார்க்கப்படுகின்றன. வளர்ப்பு பிராணிகள் அல்லாமல், இயல்பாகவே இந்த உயிரினங்கள் வீட்டிற்குள் நுழைவதால் ஏற்படும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அந்த வகையில், வீட்டிற்குள் சிட்டுக்குருவி வந்தால் சுப காரியங்கள் கைகூடும் என்றும், வெட்டுக்கிளி வந்தால் பண வரவு […]

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள் (50) என்பவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தனது மகன் ராஜாவை (30) இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த அய்யம்மாளின் மகன் ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ள நிலையில், அவரது தொடர் குடிப்பழக்கம் காரணமாக மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். […]

தமிழக அரசியல் களத்தில் ‘மக்கள் ஒற்றுமை கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கமால் பாஷா புதிய கட்சியின் பெயர் மற்றும் அதிகாரப்பூர்வ கொடியை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்வில் பேசிய கட்சியின் தலைவர் கமால் பாஷா, “த.மு.மு.க. மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவற்றில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்துடன், பல கட்சிகளைச் சேர்ந்த […]

நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தை தொடர்ந்து பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி ஆற்றில் உருவான கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. ஆற்றின் கரையோரத்தில் இருந்த குடியிருப்புகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். இதில் மாயமானவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் […]

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக சரிவடைந்துள்ளது. நேற்று முன்தினம் சவரனுக்கு ₹160 குறைந்து ஒரு சவரன் ₹1,20,080-க்கு விற்பனையான தங்கம், நேற்று விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் நீடித்தது. இந்நிலையில், இன்று காலையில் சவரனுக்கு ₹560 குறைந்து ஒரு சவரன் ₹1,19,520-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹14,940-க்கும் வர்த்தகமானது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் 2-வது முறையாக தங்கம் விலை […]

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்கள் தலா ரூ.800 வீதம் வாங்கியதில் நிதி முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், அதற்கான செலவினங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராகவ் பாலாஜி மீது தமிழ்நாடு பொது விநியோக திட்ட ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பால்ராஜ் என்பவர் ஐகோர்ட் மதுரைக் […]