தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது முந்தைய அரசின் நல்ல திட்டங்களை தொடர்வது இயல்பான ஒன்றுதான் என்றும், திட்டங்களுக்கு எந்த தனிநபரின் பெயரையும் சூட்டாமல் பொதுவான பெயர்களை சூட்டுவதே தவெக அரசின் முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக அரசு புதிய பெயர்களில் பழைய திட்டங்களையே ‘ஸ்டிக்கர்’ ஒட்டிச் செயல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
நீதிமன்ற அவமதிப்பு என்ற வார்த்தையை கேட்டாலே நடுக்கம் ஏற்படும் காலம் மலையேறி விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வரும் டாக்டர் செந்தில்குமார் என்பவரை, திண்டுக்கல்லில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடிக்குத் துறை நிர்வாகம் கடந்த 2025 ஜூன் மாதம் பணியிட மாற்றம் செய்தது. அடுத்த நான்கு மாதங்களிலேயே அவரை மீண்டும் தூத்துக்குடிக்கு மாற்றியதை எதிர்த்து, அவர் உயர் […]
தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூலை மாதத்தில் பெய்த பரவலான மழை மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தந்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் மழைப்பொழிவு கணிசமாக குறையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சராசரி மழைப்பொழிவு 254.9 மில்லிமீட்டராக இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் வழக்கமான அளவில் 94 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த […]
தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசின் ஒரு ரூபாய் வருவாயில் எந்தெந்த துறைகளிலிருந்து எவ்வளவு பணம் கிடைக்கிறது மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த விரிவான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயை கணக்கிடுகையில், அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாயில் அதிகபட்சமாக 43.3 சதவீதம் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலமாகவே பெறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, 33.1 சதவீதம் […]
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு, தமிழக அரசு சார்பில் மொத்தம் ரூ. 80 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் விஜய் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவெடுக்க வைக்கும் நோக்கில், தமிழக அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உயர்தரப் […]
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மதுபானங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “சென்னையின் கொளத்தூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட 30 முக்கியப் பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் […]
உலகளாவிய வர்த்தக நகர்வுகள் மற்றும் இறக்குமதி வரிக் கொள்கைகள் காரணமாக தங்கத்தின் சந்தை விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,240 வரை உயர்ந்து நகைப் பிரியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 5)இரண்டு முறை உயர்வை சந்தித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 4) ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,600-க்கும், ஒரு […]
தமிழக அரசின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்து, தற்போது ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், மாநிலத்தின் வரி வருவாய் அதிகரித்திருந்தாலும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஆதாரங்கள் குறைந்துள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நிதி மேலாண்மை பற்றிய வெள்ளை அறிக்கையிலேயே, கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் அளவு இருமடங்காக […]
டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபான வகைகளை, மது பிரியர்கள் மொபைல் போன் செயலியில் தேர்வு செய்து, பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தி, வாங்கி கொள்ளும் திட்டத்தை, டாஸ்மாக் நிர்வாகம் தொடங்க உள்ளது. தமிழகத்தில் 4,048 டாஸ்மாக் கடைகள் மூலம் பீர் மற்றும் மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகளுக்கு, மது பிரியர்கள் நேரில் சென்று, மதுபானங்களை வாங்க வேண்டும். பல கடைகளில், மது பிரியர்கள் விரும்பி கேட்கும் மது […]
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு இ-கேஒய்சி (eKYC) பதிவு முகாம் வரும் ஆகஸ்ட் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் வழிகாட்டுதலின்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டு, அவர்களின் விரல் ரேகை […]

