சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்காவலன் (வயது 31). இவர் மீது சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல், திருட்டு, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல், தாக்குதல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அவற்றில் 3 கொலை வழக்குகள் மற்றும் 2 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். இதனால் அவர் A+ வகை சரித்திரப் […]

தமிழகத்தின் காவிரி நீர் உரிமைகளை நிலைநாட்ட தவறியதோடு, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாக கூறி தவெக அரசை கண்டித்து, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சுமார் 14 லட்சம் விவசாயிகள் வரை ரூ.2,500 கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், […]

பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு ஆடிப்பூர திருவிழா வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பக்தர்களின் வசதிக்காகவும் திருவிழா சிறப்பான முறையில் நடைபெறவும், ஆகஸ்ட் 14 அன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்றைய தினம் மாவட்டத்தில் இயங்கும் […]

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிடக் கோரும் விவகாரத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்திற்கு நாள்தோறும் உரியப் பங்கீட்டு நீரைத் திறந்துவிட வேண்டும் எனக்கூறி, காவிரி ஒழுங்காற்றுக் குழு ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது. இருப்பினும், கர்நாடக அரசு வழக்கம் போல் நீர் திறக்க மறுப்பு தெரிவித்து வந்ததோடு, மேகதாது அணை விவகாரத்தையும் மீண்டும் கையில் எடுத்துப் பிரச்சனையை […]

தமிழக அரசியலில் மேகதாது அணை விவகாரம் மீண்டும் பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளும் த.வெ.க அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. மேகதாது விவகாரத்தில் திமுக முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தவெக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”மேகதாது அணை விவகாரமானது கடந்த 2026 மே 10-ஆம் தேதிக்குப் பிறகுதான் தொடங்கியது என்பதைப் போல திமுக தலைமை பேசி […]

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசு மற்றும் நிதித் துறை சார்ந்த பல்வேறு முக்கிய விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். அந்த வகையில், பிறக்கவிருக்கும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ரயில்வே முன்பதிவு, வருமான வரி தாக்கல், சமையல் எரிவாயு விலை மற்றும் வங்கிச் சேவைகள் எனப் பல துறைகளில் புதிய நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை முறையிலும், மாதாந்திர குடும்ப வரவு செலவுத் […]

டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று (ஜூலை 29) தீவிர சோதனை நடத்தினர். இந்த சூழலில் டாஸ்மாக் நிறுவன முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீதான எப்.ஐ.ஆர் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சென்ற திமுக ஆட்சியின் போது டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி நியமன ஆணைகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து […]

தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகர்களாக வலம் வருபவர்கள் அரசியலில் களம் காண்பதும், அது குறித்த விவாதங்கள் எழுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில், தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமும், முதல்வர் மற்றும் தவெக தலைவருமான விஜய்யின் ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட், முன்னணி நடிகர் தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்து கூறியுள்ள கணிப்புகள் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தனியார் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில், […]

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, வழக்கம்போல் பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா பகுதியில் ஆவடி மாநகராட்சி சார்பில் இன்று சிற்றுண்டி வழங்கப்பட்டது. அப்போது, பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சாம்பாரில் உயிரிழந்த நிலையில் பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு, உணவருந்தி கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள்ளாகவே, அந்த உணவை உணவகம் மற்றும் விநியோக இடத்திலேயே பல ஊழியர்கள் உட்கொண்டிருந்ததால், உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்காக ஆவடி அரசு […]