கேரளாவை சேர்ந்த கஸியா லிஸ் மெஜோ என்ற 19 வயதே ஆன இளம்பெண், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 மகுடத்தை சூடினார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரமாண்ட இறுதிப்போட்டியில், கேரளாவின் மாவேலிக்கரையைச் சேர்ந்த 19 வயதான சட்டக்கல்லூரி மாணவி கஸியா லிஸ் மெஜோ (Kaziah Liz Mejo) ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ பட்டத்தை வென்றுள்ளார். 52 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில், அவருக்கு முந்தைய வெற்றியாளரான மனிகா […]

உலகளாவிய சாதகமான சூழல் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் விலைமதிப்பற்ற உலோகங்களை நோக்கித் திரும்பியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் உயர்ந்தன. இதன் விளைவாக, உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தையும், வெள்ளியின் விலை 15 வார கால உச்சத்தையும் எட்டின. அந்தவகையில் வாரத்தின் முதல்நாளான இன்று (ஆகஸ்ட் 24) அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 […]

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசினார். அப்போது பேசிய அவர், “தான் ரூ.4 கோடிக்கு வீடு வாங்கியதாக பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருபவர்களுக்கு பகிரங்க சவால் விடுகிறேன். அத்தகைய வீட்டின் பத்திரத்தை யார் நேரில் கொண்டு வந்து காண்பிக்கிறார்களோ, அவர்களுக்கே அந்த வீட்டை பரிசாக முழு மனதுடன் அன்பளிப்பாக வழங்குவதாக தெரிவித்தார். தாங்கள் தீவிரமாக மக்கள் பணியாற்றுவதற்காக […]

சிவபெருமானை நோக்கியவாறு நந்தி வீற்றிருப்பது மரபு என்றாலும், மற்ற ஆலயங்களின் வாகன அமைப்பில் இருந்து மாறுபட்டு, கோவில் நுழைவு வாசலிலும் நந்தி தேவர் சிலை அமைக்கப்பட்டிருப்பது ஆழ்ந்த ஆன்மிக மற்றும் தத்துவ முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனந்தத்தை அருள்பவராகவும், சிவகணங்களின் தலைவராகவும் போற்றப்படும் நந்தி பெருமான், சிவபெருமானின் முதன்மை வாயிற்காவலராகவும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த யோக குருவாகவும் சாஸ்திரங்களில் போற்றப்படுகிறார். சிலாத முனிவரின் தவத்தின் பயனாக யாக பூமியில் தோன்றி, தனது […]

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். தஞ்சையில் விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தான் நடத்திய போராட்டத்தின்போது டம்மி முதல்வர் என விமர்சித்ததற்கு அமைதி காத்த அரசு, காவிரி விவகாரத்தில் தண்ணீர் வரவில்லை எனக் கூறியதும் கோபமடைந்து தன்னைக் கைது செய்ததாக உதயநிதி தெரிவித்தார். பின்னர் வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியதோடு, ‘உதயநிதியை கைது செய்யவில்லை; விசாரித்து அனுப்புகிறோம்’ […]

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்பத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வழங்கப்படும் நகைக் கடன் தொகையை கணிசமாக உயர்த்துவதற்குத் தமிழகக் கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 1,454 நகர்ப்புற வங்கிக் கிளைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பதிவாளரின் கீழ் இயங்கும் […]

சமூக வலைதளங்களில் மாடர்ன் உடையில் கார் ஒன்றிலிருந்து இறங்கி வரும் இளம் பெண்ணின் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி, அது தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கீர்த்தனா என பரவலாகப் பகிரப்பட்டு வந்த நிலையில், அதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். ஒரு பெண் தனது அன்றாட வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் இயல்பான வீடியோவை வைத்து அரசியல் தளத்தில் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைப்பது, அதைச் செய்பவர்களின் பலவீனமான மற்றும் பிற்போக்குத்தனமான […]

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 23), தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மாற்றங்களால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், […]

தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதிகார மட்டத்திலான ஊழலை வேரறுக்க, சிங்கப்பூர் நாட்டை பின்பற்றி மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் விஜய்யை ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “சர்வதேச அளவில் சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பெருமளவிலான ஊழல் குற்றங்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் சமரசமின்றி அமல்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக் […]

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவை உறுப்பினர் கே.என். நேரு தான் ரேஷன் அரிசியையே உணவாக உட்கொள்வதாகக் கூறியிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், நடைமுறையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தகுதியற்ற முறையில் ரேஷன் அரிசி விநியோகிக்கப்படுவதாகப் பரவலான புகார்கள் எழுந்துள்ளன என அவர் குறிப்பிட்டார். இத்தகைய குறைகளைக் களைந்து, பொதுமக்களுக்கு உயர்தரமான உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்குவதற்கு முதலமைச்சர் விஜய் […]