தமிழக அரசியலில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவின் அரசியல் மறுபிரவேசம், தற்போது ஒரு புதிய கட்சியின் உதயம் என்ற நிலைக்கு வந்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் நிலவிய அதிகாரப் போட்டிகள், சசிகலாவின் சிறைவாசம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் அதிரடி நடவடிக்கைகள் என பல்வேறு சோதனைகளை கடந்த சசிகலா, தற்போது தனது சொந்த அரசியல் பாதையை தேர்வு செய்துள்ளார். அதிமுகவில் மீண்டும் இணைய அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
பாட்டாளி மக்கள் கட்சியில், தற்போது ஏற்பட்டுள்ள தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான அதிகார போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் பாரம்பரியமான ‘மாம்பழம்’ சின்னம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே நிலவும் மோதல், இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளது. கட்சியின் தலைவர் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அன்புமணி ராமதாஸ் அந்தப் பொறுப்பில் நீடிப்பதாகக் கூறி டாக்டர் ராமதாஸ் தரப்பு […]
தமிழ்நாட்டில் பால் உற்பத்தி சரிவடைந்துள்ளதை சாதகமாக்கி, தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக நிலவும் உற்பத்தி தட்டுப்பாட்டினால் ஆவின் நிறுவனம் அண்டை மாநிலமான கர்நாடகாவின் ‘நந்தினி’ பாலிடம் கையேந்தும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருவதுடன், அந்த சுமையை நுகர்வோர் தலையில் சுமத்தியுள்ளன. தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமான ஆரோக்யா, பால் […]
மத்திய – மாநில அரசுகள் இணைந்து பொது விநியோக திட்டத்தில் பெரும் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளை தடுத்து, தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே பலன்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறைகள் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளன. புதிய விதிகளின்படி, ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஒவ்வொரு […]
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பிச்சாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் நர்மதா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கும், இவரது கணவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி நர்மதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து தனது தோழி வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த அவர், மர்மமான முறையில் மாயமானார். இந்நிலையில், பிப்ரவரி 10-ஆம் தேதி ரங்கம்பாளையம் புறவழிச்சாலையில் தலையில் கல்லைப் போட்டு […]
2026-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் விடைபெற உள்ள நிலையில், வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கம் செலுத்தக்கூடிய சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. எரிவாயு சிலிண்டர் விலை முதல் பிஎஃப் (PF) பணம் எடுக்கும் முறை வரை, இந்த மார்ச் மாதம் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் : வழக்கம் போல மாதத்தின் முதல் […]
இஸ்லாமிய நாட்காட்டியின் புனித மாதமான ரமலான், வெறும் பசியையும் தாகத்தையும் தாங்குவது மட்டுமல்ல; அது ஆன்மாவை சுத்திகரிக்கும் ஒரு மாபெரும் பயிற்சிப் பாசறை. மனித குலத்தின் வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில், நோன்பின் முழுமையான பலனைப் பெற உணவைத் தவிர்ப்பதுடன், நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளிலும் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. நோன்பு என்பது வயிற்றுக்கு மட்டும் விதிக்கப்பட்ட தடையல்ல, அது நாவிற்கும் பொருந்தும். பிறரைப் பற்றிப் புறம் பேசுவது, […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், கூட்டணி கணக்குகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் அரசியல் அரங்கில் அனலை கிளப்பியுள்ளன. குறிப்பாக, பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறி, இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளதை காட்டுகிறது. இந்த சூழலில், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சுவார்த்தைகளைத் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் […]
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பமாக, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். 3 தசாப்தங்களுக்கும் மேலாகத் தன்னோடு நிழலாகத் தொடர்ந்து வரும் விசுவாசமிக்கத் தொண்டர்களுக்கும், கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கும் வாய்ப்பளிப்பதே காலத்தின் கட்டாயம் என்று அவர் கூறியுள்ளார். கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் தன்னை முழுமையாக […]

