பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் இராவணன் நீக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாமகவில் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை மருத்துவர் ராமதாஸ் நியமித்து வருகிறார். அந்தவகையில் தற்போது வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் […]

நீட் தேர்வில் 680 மதிப்பெண் எடுத்த கோயம்புத்தூர் மாணவி அபிஷியாவுக்கு குறைவான பர்சன்டேஜ் வழங்கப்பட்டது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தமிழ்நாடு தொடர்ச்சியாக எதிர்த்து வந்தாலும், நீட் தேர்வு கட்டாயம் என்பதில் மத்திய அரசு தீவிரமான நிலைப்பாடு கொண்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு போராடி வருகிறது. இந்த […]

கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் முதலியவற்றிற்கு உரிய போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள குவாரிகளிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்களை வரன்முறைப்படுத்துவதற்கு ஏதுவாக இணையவழியில் Bulk permit வழங்கும் நடைமுறை ஜூன்-2024 முதலும் மற்றும் e-permit வழங்கும் நடைமுறை ஏப்ரல்-2025 முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு இருப்பு கிடங்கு விதிகள், 2011-ன்படி கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் […]

நடப்பு கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2023-24, 2024-25 ஆம் கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களின் பெயர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். […]

அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில், ஜூன் 23, 24-ல் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டங்கள் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை பள்ளிக்கல்வித்துறை நடத்தி வருகிறது. அதன்படி பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் […]

கல்வி உதவித்தொகையுடன் முதுநிலை தமிழ் படிப்பில் சேர மாணவர்கள் ஜூலை 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இந்த நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் 5 ஆண் கால ஒருங்கிணைந்த முதுநிலை தமிழ் பட்டப் படிப்பு, முதுநிலை தமிழ் பட்டப் படிப்பு மற்றும் தமிழ் முனைவர் பட்டம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்த படிப்புகள் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் ஏற்புடன் […]

மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; பள்ளிக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் பொருட்டு EMIS தொழில்நுட்ப குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியினை விரைந்து முடிக்கும் பொருட்டு EMIS App இல் […]

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்,சென்னை மாவட்டத்தில் 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம் அளிக்காதவர்கள் வைப்புத்தொகை பத்திரம், வங்கிக் கணக்கு விவரம் (தனி கணக்கு), 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களுடன் சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம். முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் […]

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, ஜூன் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை […]

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத்தேர்வு இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 70 காலியிடங்களையும், உதவி வனப்பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத்தேர்வு இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 44 தேர்வு மையங்களில் 2,49,296 பேர் எழுதுகின்றனர். தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என […]