திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஒன்னுபுரம் ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆகாஷ் (24 ). இவர், காவல்துறை பணியில் சேருவதற்காக வேலூர் மைதானத்தில் உடற்பயிற்சி செய்ய தினந்தோறும் சென்று வந்துள்ளார். அப்போது அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த துர்கா (21) இவரும் காவல்துறை பணியில் சேர்வதற்காக வேலூர் மைதானத்தில் பயிற்சிக்காக வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பேசி வந்த இவர்களுக்கு நடுவே, காதலும் மலர்ந்துள்ளது. […]

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருபவர் சந்திர பாண்டியன். இவரை மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் சிலரால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு விளைவாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. காவல்துறையினர் அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் […]

சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் தன்னுடைய whatsappல் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்தார். அதில் பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை என்ற தலைப்புடன் வாசகங்கள் இருந்தனர் மேலும் சேலம் மாநகர காவல் துறை ஆணையர் லாவண்யா சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார் என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு, ஓய்வு பெற்ற டிஜிபியிடம் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி சேலம் […]