தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் மும்முமரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
மத்திய அரசின் ‘பிஎம் கிசான்’ (PM-KISAN) நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு, அடுத்தகட்ட தவணைத் தொகையைப் பெறுவதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 6,000 நிதியுதவி, 3 தவணைகளாக தலா ரூ. 2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த நிதியுதவியை தடையின்றிப் பெறுவதற்கு, ஒவ்வொரு விவசாயியும் கட்டாயமாக விவசாய அடையாள எண் பெற்றிருக்க வேண்டும் என […]
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்குகிறது. மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த முக்கியத் தேர்வை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். இதற்காக தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,545 பள்ளிகளைச் சேர்ந்த 7,99,692 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களுடன் […]
தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இன்று டெல்லி செல்கிறார். இன்று (மார்ச் 2) காலை 10:45 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் அவர், டெல்லியில் பாஜக மேலிடத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய 4 இடங்களில் […]
தமிழக அரசியலின் ஆகச்சிறந்த அடையாளமாக திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், அஞ்சலி செலுத்த வந்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மீது, மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் முன்வைத்துள்ள மிகக்கடுமையான குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளன. […]
மதுரையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு, “இது எங்கள் குடும்ப விஷயம் போன்றது; பேச்சுவார்த்தை விவரங்களை இப்போது பொதுவெளியில் பகிர முடியாது. அனைத்தும் முடிவானதும் அதிகாரப்பூர்வமாக […]
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில், குடும்பக் கௌரவத்தை காப்பதாக கூறிப் பெற்ற அக்காவையே தம்பி வெட்டிக்கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்துங்கநல்லூர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா (35), கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுமித்ராவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவரது தம்பி முத்துராஜா (27), அக்காவை கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே […]
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்கவுள்ளது. கோடை விடுமுறைக்கு முன்பாகவே மாணவர் சேர்க்கை பணிகளை துரிதப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான விரிவான முன்னேற்பாடுகள் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தயார் நிலையில் உள்ளன. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தச் சிறப்புத் திட்டம் […]
தமிழ்நாடு அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில், ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவீத உள் இடஒதுக்கீட்டு முறையில் முக்கிய சீர்திருத்தத்தை அரசு மேற்கொண்டுள்ளது. பொருளாதார மாற்றங்களை கருத்தில் கொண்டு, இந்த சலுகையைப் பெறுவதற்கான தகுதி வரம்பில் நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு அதிரடி மாற்றத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை, ஆதரவற்ற விதவை என்பதற்கான சான்றிதழ் பெற்று வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட பெண்ணின் […]

