இன்றைய காலக்கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல தேவைகளுக்காகப் பயன்படும் இந்த சாதனத்தில், பலரும் அறியாத ஒரு முக்கியமான அம்சம் உள்ளது. இந்தச் சிறப்பம்சத்தின் மூலம் நமது உயிரையும், நமது குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் எதிர்பாராத நேரத்தில் நம்மால் காப்பாற்ற முடியும். அந்த அரிய ‘எமர்ஜென்சி கால்’ அம்சம் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம். அவசர அழைப்பில் […]

கல்லீரல் சிரோசிஸ் எனப்படுவது கல்லீரலை ஒட்டி உண்டாகும் ஒரு நாள்பட்ட நோய் பிரச்சனை ஆகும். அதாவது, கல்லீரிலின் ஆரோக்கியமான திசுக்களில் உண்டாகும் சேதங்கள் ஆகும். கல்லீரல் சிரோசிஸ் பிரச்சனையில் அலட்சியமாக இருந்தால், கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய், இரத்தம் உறைதல், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் எழக்கூடும். கல்லீரல் நமது உடலில் ஒரு அத்தியாவசிய உறுப்பு. இது இரத்தத்தை வடிகட்டுவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் நச்சு நீக்கம் போன்ற […]

மாம்பழம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடைகாலத்தின் தனிச்சிறப்பு. ஆனால், மாம்பழத்தின் பலன்களை அதன் இலைகளில் இருந்தும் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாது. ஆம், மாமர இலைகள் ஆரோக்கியம் நிறைந்த அற்புதப் பொக்கிஷம். வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளான ஃபிளாவனாய்டுகள், பாலிபினால்கள் ஆகியவை இந்த இலைகளில் நிறைந்துள்ளன. சர்க்கரை நோய் கட்டுப்பாடு முதல் இதய ஆரோக்கியம் வரை […]

கண் பார்வையை இழந்த நோயாளிகள் இப்போது மீண்டும் படிக்கவும், முகங்களை அடையாளம் காணவும், தினசரி வேலைகளைச் செய்யவும் முடிகிறது.. ஆமா. இது “பிரிமா சிஸ்டம் (Prima System)” எனப்படும் புதுமையான மைக்ரோசிப் மூலம் சாத்தியமானது. 5 ஐரோப்பிய நாடுகளில் 38 பேரை உள்ளடக்கிய ஒரு சர்வதேச பரிசோதனையின் பகுதியாக, லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த மைக்ரோசிப் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. பார்வையை மீட்டெடுத்த அதிசயம் ஒரு குறிப்பிடத்தக்க […]

இன்றைய வாழ்க்கை முறையில் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பது ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது, ​​அது ஒரு உறுப்பை மட்டுமல்ல, முழு உடலையும் பாதிக்கிறது. மூட்டு வலி, கீல்வாதம், சிறுநீரக கற்கள் மற்றும் எலும்பு பலவீனம் போன்ற கடுமையான அறிகுறிகள் ஏற்படலாம். எனவே, யூரிக் அமில அளவை விரைவாகக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். உண்மையில், யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவது மருந்துகளின் […]

தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவ மழை கடந்த 17ம் தேதி முதல் துவங்கியது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் கொசுக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சிறந்த முறையில் உங்களைப் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கொசுக்கள் உங்களைக் கடித்தால், அவை அதிக காய்ச்சலை உண்டாக்கி, வீக்கம் மற்றும் அரிப்பு ஆகியவற்றை உண்டாக்கும். குளிர் அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அந்த இடத்தை […]

தமிழகத்தில் 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் மகளிருக்கான 6 புதிய ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 தங்கும் விடுதிகள் சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட 3 மகளிர் தங்கும் விடுதிகளும் சீரமைக்கப்பட்டு செயல்படுகின்றன. தற்போது மொத்தம் 19 விடுதிகள் […]