நாம் சந்தைக்கு செல்லும்போது, ​​உருளைக்கிழங்கு வாங்காமல் வீடு திரும்புவதே இல்லை. ஏனெனில் அது அதிக அளவில் உண்ணப்படுகிறது. அதன் விலையும் மிகவும் குறைவு. அதை வைத்து குழம்பு முதல் பஜ்ஜி வரை பலவிதமான உணவுகளைச் செய்கிறோம். இருப்பினும், உருளைக்கிழங்கு குறித்த சமீபத்திய ஆய்வுகள் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. அவை என்னவென்று இங்கே தெரிந்து கொள்வோம். உருளைக்கிழங்கை விரும்பாதவர்களே இல்லை என்று சொல்லலாம். மேலும், இந்த உருளைக்கிழங்கு மீதான மோகம் […]

போதுமான உறக்கத்துடன், வைட்டமின் டி-யும் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.. சிறு வயதிலேயே தூக்கமின்மை மற்றும் வைட்டமின் டி குறைபாடு போன்ற பிரச்சனைகள் குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.. இந்த இரண்டு காரணிகளையும் பெற்றோர்கள் அலட்சியம் செய்யக்கூடாது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 முதல் 16 மணி நேரம் தூக்கம் […]

கண்களுக்குக் கீழே ஏற்படும் வீக்கம் அல்லது ‘பெரியோர்பிட்டல் எடிமா’ என்பது பலரை பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். இரவில் போதுமான உறக்கம் எடுத்தாலும், காலையில் எழுந்ததும் கண்கள் வீங்கியிருந்தால், உங்கள் முகம் கவர்ச்சியாகத் தெரியாது. இது பொதுவாக வீங்கிய கண்கள் என்று அழைக்கப்படுகிறது. கண் வீக்கத்திற்கான முக்கிய காரணங்கள்: நமக்கு வயதாகும்போது, ​​கண் இமைகளைச் சுற்றியுள்ள தசைகளும் திசுக்களும் பலவீனமடைகின்றன. இதனால் கண்களைச் சுற்றியுள்ள கொழுப்புத் தளர்வடைகிறது. அந்தப் பகுதியில் திரவம் […]

இன்றைய அவசர உலகில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது என்பது ஒரு சவாலான காரியமாகிவிட்டது. மாறிவரும் வாழ்க்கை முறை, பணிச்சுமை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, பலரும் முறையான தூக்கத்தையும் சத்தான உணவையும் இழந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் நாம் உட்கொள்ளும் உணவு நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், பலரும் நள்ளிரவு வரை கண் விழிப்பதோடு, அந்த நேரத்தில் கண்ட உணவுகளைச் சாப்பிட்டு உடல் […]

சந்தைக்கு சென்றால் வாரம் முழுமைக்கும் தேவையான காய்கறிகளையும் பழங்களையும் மொத்தமாக வாங்கி வந்து குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) அடைத்து வைப்பது நம்மில் பலரது வழக்கமாகிவிட்டது. கோடைக்காலம் மட்டுமின்றி, கடும் குளிர் நிலவும் காலங்களிலும் ‘ஃப்ரெஷ்’ ஆக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்தையும் பெட்டிக்குள் வைக்கிறோம். ஆனால், குளிர்காலத்தில் சில குறிப்பிட்ட காய்கறிகளைப் பிரிட்ஜில் வைப்பது அவற்றின் தன்மையை மாற்றி, ஆரோக்கியத்திற்குப் பெரும் உலையை வைக்கும் என சுகாதார நிபுணர்கள் […]

ஒவ்வொரு இந்திய இல்லத்தின் சமையலறையிலும் அஞ்சறை பெட்டியின் மிக முக்கியமான அங்கமாக விளங்குவது பூண்டு. வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப்படும் ஒரு மசாலாப் பொருளாக பூண்டை பார்க்க முடியாது. இது உண்மையில் இயற்கை நமக்கு அளித்த ஒரு மகத்தான மருந்தகம். “உணவே மருந்து” என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்கும் பூண்டு, பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. நவீன மருத்துவ ஆய்வுகள் பூண்டு ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி ஊக்கி […]

நமது ஊர் சமையலில் மசாலாக்கள் எந்தளவுக்கு மணத்தை கூட்டுகிறதோ, அதே அளவுக்குச் சுவையை தீர்மானிப்பதில் சமையல் எண்ணெய்க்கும் முக்கியப் பங்கு உண்டு. கூட்டு, பொரியல் முதல் பரோட்டா, ஃப்ரைட் ரைஸ் வரை எண்ணெய் இன்றி எதுவும் நகர்வதில்லை. ஆனால், சுவைக்காக நாம் சேர்க்கும் அதிகப்படியான எண்ணெய், நம் ஆரோக்கியத்திற்கு ஒரு மெதுவான நஞ்சாக மாறிவிடக்கூடும் என்பதுதான் கசப்பான உண்மை. எந்தவொரு உணவுப் பொருளாக இருந்தாலும், அதை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் […]

தற்போதைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் அதிகரித்த மன அழுத்தம் காரணமாக, இதய நோய்கள் இளம் வயதினரிடையே அதிக அளவில் காணப்படுகின்றன. பல சமயங்களில், மாரடைப்பு அல்லது பிற தீவிரப் பிரச்சனைகள் திடீரென்று வருவது போல் தோன்றினாலும், அதற்கு முன்பே நமது உடல் சில அறிகுறிகளைக் காட்டுகிறது. காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய இருதயநோய் நிபுணர் சமீபத்தில் வெளியிட்ட தகவல்களின்படி, நமது உடலில் காணப்படும் சில மாற்றங்களைக் கவனிப்பதன் […]

எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும், பலருக்கு உணவு குறித்த தவறான பார்வை உள்ளது. குறைவாகச் சாப்பிடுவதன் மூலமோ அல்லது உணவைத் தவிர்ப்பதன் மூலமோ மட்டுமே எடையைக் குறைக்க முடியும் என்ற தவறான எண்ணம் பலரிடம் இன்னும் இருக்கிறது. உண்மையில், உடல் எடை கூடுவது அல்லது குறைவது என்பது நாம் உண்ணும் உணவின் அளவை விட அதன் தரத்தையே அதிகம் சார்ந்துள்ளது. உடலுக்குத் தேவையான சத்துக்கள் சரியான அளவில் […]

இயற்கை தந்த வரப்பிரசாதமான வாழைப்பழங்கள் ஒரு காலத்தில் தூய்மையான உணவாக கருதப்பட்டன. ஆனால், இன்றைய வணிக உலகில் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, வாழைப்பழங்கள் ரசாயனங்கள் கலந்த நஞ்சாக மாற்றப்படுவது வேதனையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. மரத்தில் காயாக இருக்கும்போது அவை மெதுவாக ‘எத்திலீன்’ வாயுவை வெளியிட்டு இயற்கையாக பழுக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். இந்தத் தாமதத்தை தவிர்க்க, வியாபாரிகள் ‘கால்சியம் கார்பைடு’ போன்ற ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த ரசாயனம் […]