ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துகள் அடங்கிய சாணக்கிய நீதியில், வாழ்க்கை, குடும்பம், பணம், உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பல அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. அதில், பெண்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சில விஷயங்களை பிறரிடம் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்கள் தவறான நபர்களிடம் சென்றால், அதை அவர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதாக சாணக்கியர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து […]
இந்திய உணவு வகைகளில் சப்பாத்திக்கு முக்கிய இடம் உண்டு. கோதுமை மாவில் தயாரிக்கப்படும் சப்பாத்தி, பல வீடுகளில் அன்றாட உணவின் ஒரு பகுதியாக உள்ளது. மென்மையாகவும் நன்றாக உப்பிய நிலையிலும் இருக்கும் சப்பாத்தியை சாப்பிட பலரும் விரும்பினாலும், சில நேரங்களில் சப்பாத்தி கெட்டியாகவோ அல்லது சரியாக உப்பாமல் போவதோ உண்டு. இதற்கு மாவு பிசையும் முறையில் ஏற்படும் சில தவறுகளும் காரணமாக இருக்கலாம். சப்பாத்தி மாவை குறைந்தது 8 முதல் […]
நேபாளத்தின் வடக்கு பகுதியில் திபெத் எல்லையையொட்டி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீர் நீர்வரத்து காரணமாக ராசுவா மாவட்டத்தில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தின் முழுமையான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை சுமார் 9 மணியளவில் போதே கோசி ஆற்றில் திடீரென நீர்மட்டம் […]
மத்திய பிரதேசத்தில் மருத்துவமனையில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் இருந்த பை காணாமல் போனதாக எழுந்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, எதிர்பாராத திருப்பமாக நாய் ஒன்று அந்த பையை தூக்கிச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் பையை மருத்துவமனை வளாகத்திலேயே கண்டுபிடித்து, அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை பத்திரமாக மீட்டுள்ளனர். மந்த்சோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் […]
நடிகை கவுதமி தொடர்புடைய நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தொழிலதிபர் அழகப்பன், நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக கடந்த ஜூன் மாதம் அழகப்பனுடன் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். […]
பிறப்புச் சான்றிதழ் முதல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் வரை பல்வேறு அரசு சேவைகளுக்காக அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு புதிய டிஜிட்டல் முயற்சியை மேற்கொள்ள உள்ளது. பொதுமக்கள் தங்களது கைபேசியிலேயே சுமார் 500 அரசு சேவைகளைப் பெறும் வகையில் ‘வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி’ உருவாக்கப்பட உள்ளது. இந்த புதிய செயலி ரூ.5 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரே தளத்தின் மூலம் பல்வேறு துறைகளின் […]
கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து முன்னாள் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. வழக்கு அவசரமாக எடுத்துக்கொள்ளப்படாது என்றும், வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வழக்கமான விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்டாலின் […]
டெபிட் கார்டை வீட்டில் மறந்து சென்றுவிட்டாலும் இனி கவலைப்பட வேண்டியதில்லை. UPI வசதி கொண்ட ஏடிஎம்கள் மூலம், கையில் டெபிட் கார்டு இல்லாமலேயே வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும். இதற்காக Google Pay, PhonePe, Paytm உள்ளிட்ட பிரபலமான UPI செயலிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் உள்ள பல வங்கி ஏடிஎம்களில் தற்போது படிப்படியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. UPI மூலம் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் விபரீதமாக முடிந்துள்ளது. 32 வயது பெயிண்டரை காரில் மோதி கீழே தள்ளிய மர்ம கும்பல், பின்னர் ஆயுதங்களுடன் விரட்டி சென்று கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெங்கல் அருகே உள்ள சிற்றத்தூரைச் சேர்ந்த மாரி என்ற ரூபன் (32), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் மீது ஏற்கனவே சில குற்ற […]
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். பரீதாபாத்தில் 42 வயதுடைய சியாம்வீர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது மனைவிக்கும் காமத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு குறித்து சியாம்வீருக்கு தெரியவந்ததால், மனைவியுடன் அவர் அடிக்கடி தகராறில் […]

