தமிழகத்தில் கடந்து சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மக்களை சுட்டெரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், நாளை மறுநாள் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் வரும் 8ம் தேதி புயலாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகவே இன்று திண்டுக்கல், திருப்பத்தூர், மதுரை, திருவண்ணாமலை, கடலூர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற 20 மாவட்டங்களில் கன மழை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.