“தங்கமும் வேண்டாம், வெள்ளியும் வேண்டாம்… வெங்காயம் மட்டும் போதும்” என்று சொல்லும் அளவுக்கு, வெங்காயத்தின் முக்கியத்துவமும் அதிகம். ஒருகாலத்தில் சமையலறையில் சாதாரணமாக பயன்படுத்தப்பட்ட வெங்காயம், இன்று பலராலும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக கவனிக்கப்படுகிறது. தினசரி உணவில் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடும். பாரம்பரியமாக, தொடர்ந்து சில வாரங்கள் வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன், உடல் வலிமைக்கும் உதவும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, […]

நாம் உயிருடன் இருக்க நுரையீரல் செய்யும் பணி மிகவும் முக்கியமானது. ஆனால், பெரும்பாலானோர் நுரையீரலின் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திப்பது சுவாசப் பிரச்சனை ஏற்பட்ட பிறகுதான். மூச்சுத் திணறல், அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும் வரை பலர் அதை சாதாரண விஷயமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், நுரையீரலின் செயல்திறன் குறைந்து வருகிறதா என்பதை சில எளிய அறிகுறிகள் மூலம் முன்கூட்டியே கவனிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மருத்துவர் […]

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீ குடிப்பது முதல், மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து டீ அருந்துவது வரை, இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் டீக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. பலருக்கு டீ என்பது வெறும் பானம் மட்டுமல்ல; சோர்வை போக்கும் ஒரு பழக்கம், உறவுகளை இணைக்கும் ஒரு சிறிய தருணமாகவும் உள்ளது. ஆனால், அதிகமாக டீ குடித்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தும் பலரிடம் காணப்படுகிறது. உண்மையில், […]

உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை துல்லியமாக கண்டறிய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கியமான பரிசோதனைகளில் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கின்றன. ஆனால், இதில் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? அடிக்கடி ஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் விளக்கம் அளிக்கிறார். எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் இரண்டிலும் […]

இனிப்பான சுவை மற்றும் தனித்துவமான மணத்தால் அனைவரையும் கவரும் சீத்தாப்பழம், ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இந்தப் பழத்தை அளவோடு தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்க உதவும். அதுமட்டுமல்லாமல், சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை மற்றும் மரப்பட்டை என ஒவ்வொரு பகுதியும் பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம், […]

காலையில் அவசரமாக காலை உணவை தயாரிக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதா? ஆனால் வீட்டில் இட்லி மாவு இல்லையா? கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் அவல் இருந்தாலே போதும். அதைக் கொண்டு மிக எளிதாக, மென்மையான மற்றும் சுவையான அவல் இட்லியை செய்து அசத்தலாம். இதற்கு காரசாரமான தக்காளி சட்னி சேர்த்துச் சாப்பிட்டால் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். மேலும், அவல் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் (Low Glycemic Index) கொண்ட […]

தற்போதைய வாழ்க்கை முறையில் இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வதில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, இடைவேளையில் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளை ஆரோக்கியமான மாற்றுகளால் மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், எளிதில் கிடைக்கக்கூடியதும், பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்ததுமான உப்புக்கடலை (வறுத்த கருப்பு கொண்டைக்கடலை) சிறந்த […]

சின்னத்திரை நடிகை மோனிஷா, தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த வேதனையான அனுபவங்களை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் (சீசன் 2), கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பச்சைக்கிளி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ள மோனிஷா, தற்போது ஒளிபரப்பாகி வரும் Second Love நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் தனது கடந்தகால வாழ்க்கை […]

இன்றைய சமூகத்தில் பல குடும்பங்கள் சீர்குலைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கள்ளக்காதல் பார்க்கப்படுகிறது. இதன் பாதிப்பு கணவன், மனைவி மட்டுமின்றி, எந்தத் தவறும் செய்யாத குழந்தைகளின் வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக, கள்ளக்காதல் தொடர்பான தகராறுகள் மற்றும் மோதல்களால் அப்பாவி குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூலகிரி தாலுகா, […]

இன்றைய காலகட்டத்தில், பல இளைஞர்களிடம் “எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற மனநிலை அதிகரித்து வருவது கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது. சிறுவயதிலிருந்தே பகிர்ந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது, பிறரின் உணர்வுகளை மதிப்பது போன்ற நல்ல பண்புகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். இத்தகைய மதிப்புகள் குறைவதால்தான் காதல், கோபம், பழிவாங்கும் மனப்பான்மை உள்ளிட்ட காரணங்களால் பல கொடூரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்று சமூக […]